5 மாதத்தில் 1,100 பேர் தெரு நாய் கடியால் பாதிப்பு குன்றத்துார், மாங்காடு நகராட்சி படுமோசம்
Added : பிப் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியம் படப்பை, மணிமங்கலம், நந்தம்பாக்கம், கொளப்பாக்கம் ஊராட்சிகளில், இரண்டு ஆண்டுகளாக தெரு நாய்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துவிட்டது.

அதேபோல், குன்றத்துார் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாய் தொல்லை பெருகிவிட்டது.

இப்பகுதிகளில் இருந்து, தினசரி ஐந்து பேராவது நாய் கடிக்கு ஆளாகி, அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

அந்த வகையில், குன்றத்துார் வட்டாரத்தில் மட்டும், ஐந்து மாதங்களில், 1,100 பேர், தெரு நாய் கடிக்கு ஆளாகி, குன்றத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

குன்றத்துார் நகராட்சி, அமைச்சர் அன்பரசனின் சொந்த ஊராகும். அமைச்சர் ஊரிலேயே, தெரு நாய்களை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்துார் நகராட்சி மக்கள் கூறியதாவது:

தெரு நாய்களின் தொல்லை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக திரியும் இவை, பைக்கில் செல்வோரை விரட்டி விரட்டி கடிக்கின்றன.

நாய்களால், முதியவர், சிறுவர்கள் வெளியே செல்லவும் அச்சப்படுகின்றனர். கையில் குச்சியுடன் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக, குன்றத்துார் நகராட்சியில், பல முறை புகார் அளித்தும், நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை.



நாய் கடிக்கு ஆளானோர் எத்தனை?


மாதம் எண்ணிக்கை
செப்., 174அக்., 226
நவ., 201
டிச., 282
ஜன., 216மொத்தம் 1,099





துாங்கும் சுகாதார ஆய்வாளர்கள்


குன்றத்துார், மாங்காடு என இரு நகராட்சிகளுக்கும் இதுவரை, சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படவில்லை. குன்றத்துார் நகராட்சியை, மறைமலை நகர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் கூடுதலாக கவனித்து வருகிறார். மாங்காடு நகராட்சியை, கூடுவாஞ்சேரி நகராட்சி சுகாதார ஆய்வாளர், கூடுதலாக கவனிக்கிறார்.இருவரும், வாரத்தில் ஒரு நாள் மட்டுமே, இந்த நகராட்சிகளுக்கு வருகின்றனர். பொதுமக்களின் நலனை கருதி, சுகாதார ஆய்வாளர்களை தனியாக நியமித்து, தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.



 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X