'ஷாக்' அடிக்கும் மின் கட்டணம் அதிர்ந்து போன குடும்பத்தினர்
Added : பிப் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது.

இதில், காந்தி நகர் பகுதியில் வசிப்பவர் செல்வகுமார், 36. இவர், தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு, மனைவி ரேவதி, 32, மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.

ரேவதி, அருகில் உள்ள ஒரு கடையில், கூலிக்கு பூக்கட்டி கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.

இதில் வரும் வருமானத்தை வைத்து, அவர்கள் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இவர்கள் வசிக்கும் ஓட்டு வீட்டில், இரண்டு மின் விளக்குகள், ஒரு பேன், ஒரு சிறிய 'டிவி' மட்டும் உள்ளது.

மின் பயன்பாடு அதிகம் தேவைப்படும் சாதனங்களான குளிர்சாதன பெட்டி, வாஷிங் மிஷின் மற்றும் 'ஏசி' போன்ற எந்தவித எலக்ட்ரிக்கல் சாதனமும் பயன்படுத்துவதில்லை.

பல ஆண்டு காலமாக, 1,000 ரூபாய்க்கு குறைவாகவே, இதுவரை மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளனர்.

கடந்த 2022ம் ஆண்டு, நவம்பர் மாதம், 685 ரூபாய் மின் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

தற்போது, கடந்த 10 நாட்களுக்கு முன், இந்த வீட்டிற்கு மின் கணக்கீட்டாளர், மின்சார பயன்பாடு குறித்து கணக்கெடுத்துள்ளார்.

அதில், 970 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளீர்கள்; இதற்கு, 6 ஆயிரத்து 250 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ந்து போன குடும்பத்தினர், அருகில் உள்ள அச்சிறுபாக்கம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுள்ளனர்.

அதற்கு, மின் வாரியத் துறையினர், ''நீங்கள் மின்சாரம் பயன்படுத்தி உள்ளீர்கள்; அதற்காகத் தான், இவ்வளவு தொகை வந்துள்ளது. இந்த தொகையை கட்டவில்லை என்றால், மின் இணைப்பை துண்டித்து விடுவோம்,'' எனக் கூறியதுடன், கடந்த ஒரு வார காலமாக அலைக்கழித்து வந்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நேரில் சென்று ஆய்வு செய்து, மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என, கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், இதுகுறித்து, அச்சிறுபாக்கம் இளநிலை செயற்பொறியாளர் பிரபு கூறியதாவது:

அவர்கள், தண்ணீர் சூடாக்கும் 'ஹீட்டர்' பயன்படுத்தி இருக்கலாம், மின் மீட்டரை நேரில் சென்று ஆய்வு செய்ததில், மீட்டர் பழுது இன்றி நன்றாக உள்ளது.

மேலும், தற்போது செலுத்த வேண்டிய மின் கட்டணத் தொகையை, செலுத்தித் தான் ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X