திருநெல்வேலி:கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசியதாக திருநெல்வேலி மீனவர்கள் 37 பேர் மீது மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 5 விசைப்படகுகள் இழுவலைகள் மூலம் திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் இருந்து 8 கடல் மைல் தொலைவில் கடலில் மீன் பிடித்தனர். இதில் இடிந்தகரை நாட்டுப் படகு மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்தன.
எனவே இடிந்தகரை மீனவர்கள் சிலர் கடலுக்குள் சென்று அவர்களை எச்சரித்தனர். விசைப்படகுகளை ஆழ்கடலுக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். இருப்பினும் அவர்கள் செல்லவில்லை. இதையடுத்து நாட்டுப் படகு மீனவர்கள் நடுக்கடலில் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
சின்னமுட்டம் விசைப்படகு ஓட்டுனர் கிறிஸ்டி கன்னியாகுமரி மரைன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இடிந்தகரை மீனவர்கள் ஜெனிபர் வளன் ராயப்பன் சிபி பீட்டர் உட்பட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.