Two arrested for stealing free vetti and saree | இலவச வேட்டி, சேலை திருடிய இருவர் கைது | திருவண்ணாமலை செய்திகள் | Dinamalar
இலவச வேட்டி, சேலை திருடிய இருவர் கைது
Added : பிப் 09, 2023 | |
Advertisement
 

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அவலுார்பேட்டை சாலையில் நேற்று, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை சோதனை செய்ததில், 1,100 இலவச வேட்டி, சேலைகள் இருந்தன.

இது தொடர்பாக, ஆட்டோ டிரைவர் மற்றும் அதில் இருந்தவரிடம் போலீசார் விசாரித்தனர்.அவர்கள், திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் இரவு வாட்ச்மேனாக பணிபுரியும் வட ஆண்டாப்பட்டையை சேர்ந்த துவாரகேசன், 28, ஆட்டோ டிரைவர் பரசுராமன், 35, என்பது ‍தெரிந்தது.

மேலும், பொங்கல் பண்டிகையின்போது வழங்கியது போக, தாலுகா அலுவலகத்தில் இருந்த, அரசின் இலவச வேட்டி, சேலைகளை திருடி, விற்பனைக்கு அவர்கள் எடுத்து சென்றது தெரிந்தது.

திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ், திருவண்ணாமலை கிழக்கு போலீசில் கொடுத்த புகார்படி, துவாரகேசன், ஆட்டோ டிரைவர் பரசுராமன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X