ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ரயில் திட்டத்துக்கு புத்துயிர்: முதற்கட்டமாக ரூ.58 கோடி ஒதுக்கீடு
Updated : பிப் 09, 2023 | Added : பிப் 09, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

காஞ்சிபுரம்: மூன்று மாவட்டங்களை இணைக்கும், ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி ரயில் திட்டத்திற்கு, ரயில்வே பட்ஜெட்டில் முதற்கட்டமாக 58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த திட்டம் புத்துயிர் பெறுகிறது.



latest tamil news



சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதை ஒட்டி அமைந்துள்ள புறநகர் பகுதிகளும், நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன.

குறிப்பாக, சென்னையை ஒட்டி அமைந்துள்ள, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில், 10 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
அதற்கு ஏற்ப அப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஏதுவாக, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகியவை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன.



'டெண்டர்'



இதனால், அப்பகுதிகளில், சாலை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தருவது மட்டுமின்றி, அவர்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய, ரயில் போக்குவரத்து வசதியை உருவாக்குவதும் அவசியமாகியுள்ளது.

பயணியர் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்துக்காக, ஆவடி --- ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி வழித்தடத்தில், 60 கி.மீ., துாரம் புது ரயில் பாதை அமைக்கப்படும் என, 2013ல் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டப் பணியை நிறைவேற்ற, மொத்தம், 839 கோடி ரூபாய் தேவைப்படும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டது. எனினும், அப்போது, போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.

இத்திட்டம் எப்போது வேகமெடுக்கும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், 2022ல், இத்திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் வேகமாக நடந்தன. குறிப்பாக, புதிய ரயில் பாதை திட்டத்துக்கு இறுதிக்கட்ட சர்வே பணிகள் மேற்கொள்ள தெற்கு ரயில்வே, கடந்தாண்டு 'டெண்டர்' வெளியிட்டது.

சர்வே பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், இந்தாண்டு ரயில்வே பட்ஜெட்டில், ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி இடையேயான புதிய ரயில் திட்டத்துக்கு, 58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்திட்டத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு உள்ளது.

ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி திட்டம் உட்பட தமிழகத்தில், திண்டிவனம் - திருவண்ணாமலை இடையேயும், திண்டிவனம் - நகரி இடையேயும், மாமல்லபுரம் வழியாக செங்கல்பட்டு - கடலுார் இடையேயும் என ஒன்பது வகையான ரயில் திட்டங்களுக்கு, 1,057 கோடி ரூபாய், மத்திய ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.






எதிர்பார்ப்பு



ஆவடி - கூடுவாஞ்சேரி திட்டத்திற்கு, மொத்தம் 864 கோடி ரூபாய் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக 58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பூர்வாங்க பணிகள் இன்னும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, இறுதிக்கட்ட சர்வே பணிகள் நடந்து வரும் நிலையில், நில எடுப்பு செய்ய இருக்கும் பகுதிகள் ஆராய்ந்து, உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி, இழப்பீடு வழங்கப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்படும்.
திட்டத்திற்கு தேவையான மொத்த நிதியில், தற்போது குறைவான நிதியே ஒதுக்கியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக கூடுதல் நிதி ஒதுக்கினால், திட்டம் மேலும் வேகமெடுக்கும்.

ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதியில் மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சாலை போக்குவரத்தையே பெரிதும் நம்பியிருக்கும் நிலையில், ரயில் போக்குவரத்துக்கான பணிகள் துவங்கியுள்ளதால், ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

அதேபோல், சென்னையின் இரண்டாவது விமான நிலையம், பரந்துார் பகுதியில் அமைய இருக்கிறது. விமான நிலையத்தையும், காஞ்சிபுரத்தையும் இணைக்கும் வகையில், ரயில் திட்டம் கொண்டு வர வேண்டும் என, காஞ்சிபுரம் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுற்றுலா மற்றும் ஆன்மிக நகரமான காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு, செங்கல்பட்டு வழியாக தான் ரயிலில் செல்ல முடிகிறது.

ஸ்ரீபெரும்புதுாருக்கு ரயில் தடம் அமைக்கப்பட்டால், காஞ்சிபுரம் வரை அவற்றை நீட்டிக்க, மத்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
duruvasar - indraprastham,இந்தியா
09-பிப்-202313:46:47 IST Report Abuse
duruvasar இந்த திட்டத்தில் இரண்டாவது விமான நிலையம் வரயிருக்கிற பரந்தூருக்கு ஒரு கிளை பாதையை பூந்தமல்லி வழியாக அமைக்க வேண்டும்
Rate this:
Girija - Chennai,இந்தியா
09-பிப்-202321:32:42 IST Report Abuse
Girijaபரந்தூர் விளைநிலம், வந்தவாசி சுற்று பகுதிகள் புஞ்சை நிலம், வேலூர் பெங்களூருக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலை உள்ளது. புதிய விமான நிலையத்தை அங்கு அமைத்தால் தொழில் வளம் பெருகும் ....
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
09-பிப்-202310:57:31 IST Report Abuse
தமிழ்வேள் அரைகுறை திட்டம் ...காட்டுப்பள்ளி -மீஞ்சூர் முதல் -திருநின்றவூர் வழியாக வண்டலூர் வரை தற்போது உள்ள அவுட்டர் ரிங் சாலையில் மையத்தில் இரட்டை ரயில்பாதை அமைக்கும் வகையில் இடம் விடப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது . சென்னை -விஜயவாடா , சென்னை - ஜோலார்பேட்டை , எழும்பூர் -விழுப்புரம் ஆகிய மூன்று ரயில் பாதைகள் கடக்கும் இடத்திலும் , ரயில் பாதை இணைப்புக்கு வசதியாக இடம் விடப்பட்டு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன ..இந்த தடத்தில் ரயில் பாதை அமைத்தால் அதிக பட்சம் மூன்று ஆண்டுகளில் இயக்கத்துக்கு கொண்டுவர இயலும் ....புறநகர் ரயில்கள் மட்டுமின்றி , எந்த சரக்கு ரயிலும் , தேவையின்றி சென்னைக்குள் வராதவாறு உள்ள அமைப்பு இது ..இந்த பாதையை அமைக்கும்போது செலவும் குறையும் ....திருவள்ளூர் -ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் -சிங்கப்பெருமாள் கோவில் ரயில் தடங்கலுக்கும் சர்வே முன்பே முடிந்துவிட்டது ...பிறகு ஏன் அதிக செலவு பிடிக்கும் ஆவடி -கூடுவாஞ்சேரி தடம் ??
Rate this:
Cancel
09-பிப்-202310:53:05 IST Report Abuse
ஆரூர் ரங் ஆக்கிரமிப்புகளால் ரியல் எஸ்டேட் விலை அதிகமாகி விட்டது. அதனால்🤔 மாநில அரசால் விரைவாக நிலஎடுப்பு நடத்தி நிலங்களை ஒப்படைப்பதில்லை. கட்டுமானப் பொருட்கள் ஏற்பாடு செய்வதாலும் திமுக அரசு ஆர்வம் காட்டவில்லை. இதனால் தேசீய நெடுஞ்சாலை, ரயில் பாதைத் திட்டங்கள் தாமதமாகின்றன.. பழியை மத்திய அரசு மீது போடுற வேலை🤪 மட்டும் ஜரூராக நடக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X