பயிற்சியில்லா மாணவர்களுடன் விடுதி வீரர்கள் மோதுவதா உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி
Added : பிப் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



மதுரை : பயிற்சியில்லாத அரசுப் பள்ளி மாணவர்களுடன் விடுதி மாணவர்களை (எஸ்.டி.ஏ.டி.,) மாநில போட்டிக்கு அனுமதிக்கக்கூடாது; அவர்களுக்கு மாநில அளவில் தனியாக போட்டி நடத்த வேண்டும் என, அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அரசுபள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி.,) கீழ் 16 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் நடத்தப்படுகின்றன. விளையாட்டில் ஆர்வமுள்ள திறமையான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கவைத்து அருகிலுள்ள பள்ளிகளில் படிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தினமும் காலை, மாலை தலா 2 மணி நேரம் விளையாட்டுக்கான தொழில்நுட்ப பயிற்சி, 'வார்ம்அப்' பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரப்பட்டியல் படி, மூன்று வேளையும் அரசு நிர்ணயித்த சத்தான உணவு, விளையாட்டு சீருடை, ஷூ, உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. தடகளம், கபடி, கூடைபந்து, வாலிபால் என ஒவ்வொரு விளையாட்டுக்கு தனியாக பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரசுப்பள்ளி, உதவிபெறும் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் படிக்கின்றனர். அவர்கள் சத்தான உணவை சாப்பிடுவதற்கான அளவுகோல் எதுவுமில்லை. பயிற்சி தருவதற்கும் பயிற்சியாளர் இல்லை. பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் தான் அனைத்து விளையாட்டுக்கும் பயிற்சி அளிப்பவராக உள்ளார். உதாரணமாக உடற்கல்வி ஆசிரியர் தடகளத்தில் சிறந்தவராக இருந்தால், தடகளத்தில் ஈடுபாடுள்ள மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கமுடியும். அவரால் கபடி போட்டிக்கோ, கூடைபந்து போன்ற குழு போட்டிகளுக்கோ தொழில்நுட்ப பயிற்சி அளிக்க முடியாது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் தடகள, குழு விளையாட்டுகளில் வெற்றி பெறும் மாணவர்கள் நேரடியாக மாநிலப் போட்டிகளுக்கு தகுதி பெறுகின்றனர். எஸ்.டி.ஏ.டி., விடுதி மாணவர்கள் நேரடியாக மாநில போட்டிகளில் பங்கேற்கின்றனர். பயிற்சி, சத்தான உணவு, சரியான கவனிப்புடன் உள்ள எஸ்.டி.ஏ.டி., மாணவர்களுடன் எந்த அடிப்படை வசதியும் பயிற்சியும் இல்லாத அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மோதி ஜெயிக்க முடியவில்லை. பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் விடுதி மாணவர்களே பெறுகின்றனர்.

மண்டல அளவில் அரசுப்பள்ளி, பிற பள்ளி மாணவர்கள் ஜெயித்தால் விளையாட்டு கோட்டாவில் 30 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. மாநிலப் போட்டிகளில் ஜெயிக்காத நிலையில் பங்கேற்பு சான்றிதழுக்காக 15 மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதனால் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இவர்களுக்கான முன்னுரிமை பாதிக்கப்படுகிறது.

அரசுப்பள்ளி, பிறபள்ளி மாணவர்களுக்கு தனியாகவும் விளையாட்டுத்துறையில் வலிமையான நிலையில் உள்ள எஸ்.டி.ஏ.,டி., மாணவர்களுக்கு மட்டும் தனியாக மாநில அளவில் போட்டிகள் நடத்த வேண்டும் என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X