மதுரை : சட்டவிரோதமாக மது பாட்டில்கள் வைத்திருந்ததாக கைதானவருக்கு ஜாமின் அனுமதித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரம் செலுத்த உத்தரவிட்டது.
சட்டவிரோதமாக 23 மது பாட்டில்களை வைத்திருந்ததாக செல்வம் என்பவரை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை போலீசார் ஜன.,25 ல் கைது செய்தனர். அவர் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: மனுதாரர் அப்பாவி. தவறாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் விதிக்கும் கடும் நிபந்தனைகளை நிறைவேற்றத் தயார்.
அரசு தரப்பு: மனுதாரர் இதுபோல் 27 வழக்குகளில் தொடர்புடையவர். ஜாமின் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். சிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ இந்திய பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரத்தை வழங்க வேண்டும். அதற்குரிய ரசீதை அந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மறு உத்தரவு வரும் வரை மனுதாரர் தினமும் போலீசில் ஆஜராக வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடக்கூடாது. விசாரணையின்போது தலைமறைவாகக்கூடாது. இவ்வாறு உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.