தவறாக தேர்தல் நடத்திய அரசு அலுவலர்கள் நிரந்தர பணி நீக்கம்: கரூர் கலெக்டர் உத்தரவு
Added : பிப் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 


கரூர்: கரூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தவறாக தேர்தல் நடத்தியதன் காரணமாக, அரசு அலுவலர்கள், 2 பேர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களின்போது, சித்தலவாய் பஞ்., 6வது வார்டு உறுப்பினருக்கான பதவியானது பொது (பெண்கள்) பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த, 2019 தேர்தலில், இப்பதவிக்கான வேட்பு மனுக்களை பெற்றபோது இடஒதுக்கீடு அடிப்படையில் பெறாமல், பொதுப்பிரிவினருக்கு, அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, கரூர் மண்டல உதவியாளருமாக இருந்த சிவக்குமார், வேட்பு மனுக்களை பெற்றது மட்டுமின்றி, தேர்தல் நடத்தப்பட்டு, ஓட்டு எண்ணிக்கையும் நடந்தது.
தொடர்ந்து, ஆண் வேட்பாளர் வெற்றி பெற்றதாக, அப்போதைய தேர்தல் நடத்தும் அலுவலரும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருமான வெங்கடாசலம் என்பவரால், தேர்தல் முடிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் குறைபாடுகளுடன் செயல்பட்டதால், தற்போது கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் வெங்கடாசலம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சென்னை தெற்கு மண்டலத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சிவக்குமார் ஆகியோரிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது.
தவறாக தேர்தல் நடத்தியதன் காரணமாக, இரண்டு பேரும் அரசு பணியிலிருந்து நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X