வடமாநில தொழிலாளர்களால் வேலை பறிபோகிறது: அதிராம்பட்டினம் கட்டுமான தொழிலாளர் மறியல் போராட்டம்
Added : பிப் 09, 2023 | கருத்துகள் (25) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News

தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் பகுதியில், வட மாநில தொழிலாளர்கள் அதிகளவு வருகையால், தமிழக தொழிலாளர்களுக்கு வேலை பறிபோவதாகக் கூறி, நுாற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமானம், தொழில் நிறுவனங்களில் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் கட்டுமான பணிகளை தாண்டி விவசாய பணிகளிலும் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், தமிழக தொழிலாளர்களுக்கு வேலை பறிபோவதாகக் கூறி, அவ்வப்போது போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில், வட மாநில தொழிலாளர்களுக்கு, அனைத்து கட்டிட வேலைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதால், தமிழக கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கட்டிடத் தொழிலாளிகள், சேர்மன்வாடி பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி மறியலில் ஈடுபட்ட தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துக்குப் பாதிக்கப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
g.s,rajan - chennai ,இந்தியா
10-பிப்-202311:46:52 IST Report Abuse
g.s,rajan அப்போ ஒவ்வொருவரும் இனி நாடு விட்டு நாடு செல்வதற்கு விசா கொடுப்பது போல மாநிலம் விட்டு மாநிலம் செல்ல அரசாங்கம் அனுமதி தர வேண்டுமா ???
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
10-பிப்-202311:18:31 IST Report Abuse
g.s,rajan குடிச்சாத் தான் வேலையே ஓடும் நம்ம ஆட்களுக்கு .இல்லை வேலை செய்வதே குடிக்கத்தான் என்ற அபாயகரமான போக்கும் நிலவுகிறது....
Rate this:
Cancel
THOMAS LEO - TRICHY,இந்தியா
10-பிப்-202306:35:23 IST Report Abuse
THOMAS LEO கூலி அதிகம். 9.30 மணிக்கு வருவது காலை சாப்பாடு , அப்புறம் 10.30 மணிக்கு வேலை தொடங்குவது, 11.30 டீ, வடை, 1.30 சாப்பாடு, மதியம் 3 மணிக கு வேலை தொடங்குவது, 5 மணிக்கு டீ, வடை. 5 மணிக்கு சட்டி கழுவி வேலை முடிக்க வேண்டியது. 6.30 மணிக்கு வேலை பார்த்தால் 1/2 day over time. அதனால் தான் வடக்கன் ஆதிக்கம். திருந்துங்க மக்களே. கொத்தனார் ₹1000,ரொம்ப ஓவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X