தந்தை, மகள் படுகொலை மனநலம் பாதித்தவர் வெறி
Added : மார் 18, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



சென்னை, சென்னை அடுத்த மாங்காடு, அடிசன் நகர், ராகவேந்திரா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வராஜ், 65; இசை பயிற்சி ஆசிரியர்.

இவரது மனைவி சாந்தி, 55; துணை நடிகை. இவர்களுக்கு, ராஜேஷ் பிராங்கோ, 40, பிரகாஷ், 32, என்ற இரண்டு மகன்களும், பெட்ரீஷா பவா பிரியா, 38, என்ற மகளும் உள்ளனர்.

ராஜேஷுக்கு திருமணமாகி, படப்பையில் வசிக்கிறார். பிரியாவிற்கு திருமணமாகி, அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கடைசி மகன் பிரகாஷுக்கு திருமணமாகவில்லை. சினிமாத் துறையில் 'டப்பிங்' கலைஞராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை அக்கா பிரியாவின் வீட்டிற்கு சென்ற பிரகாஷ், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியால் சரமாரியாக குத்தி தப்பினார். இதில், பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து, தாய் சாந்தி மற்றும் சகோதரர் ராஜேஷ் பிராங்கோ ஆகியோர் பிரியா வீட்டிற்கு விரைந்தனர். இதற்கிடையில், தந்தை செல்வராஜை காணாததால், அவரைத் தேடி வீட்டிற்கு சென்றபோது, செல்வராஜ் படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்த மாங்காடு போலீசார், செல்வராஜ் மற்றும் பிரியாவின் உடல்களை மீட்டு, அப்பகுதியில் சுற்றித் திரிந்த பிரகாஷை கைது செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது:

குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிரகாஷ், சில ஆண்டுகளுக்கு முன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து பிரகாஷுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சேர்ப்பது குறித்து, அவரது பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் ஒன்றாக கூடி பேசியுள்ளனர்.

இதனால், ஆத்திரத்தில் இருந்த பிரகாஷ், தந்தை மற்றும் சகோதரியை கொலை செய்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X