குறுகிய இடத்தில் செயல்படும் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்: புகார்தாரர்கள் அவதி
Added : மார் 20, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 


கரூர்: கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், பல ஆண்டுகளாக குறுகிய இடத்தில் செயல்பட்டு வருவதால், பெண் போலீசார் மற்றும் புகார்தாரர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் கரூர் இருந்தபோது கடந்த, 1994ல், கரூர் சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், மகளிர் போலீஸ் ஸ்டேஷனை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

கரூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகும், கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் பழைய கட்டடத்தில் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் உள்பட, 15க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆனால், போதிய இடவசதி இல்லாமல், பெண் போலீசார் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், போதிய வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில், ஸ்டேஷனை சுற்றி மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால், கொசுத் தொல்லை ஏற்படுகிறது. பழைய கட்டடம் என்பதால், மழை காலங்களில் நீர் கசிவும் ஏற்படுகிறது.
கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், கரூர் டவுன் சரக பகுதிகளை சேர்ந்த கரூர் டவுன், வெங்கமேடு, வெள்ளியணை, தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், வாங்கல் உள்ளிட்ட ஆறு போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், பெண்கள் தொடர்பான புகார்கள் விசாரிக்கப்படுகிறது. சில நாட்களில் இருதரப்பை சேர்ந்த, புகார்தாரர்கள் அதிக அளவில் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகின்றனர்.
போதிய இடம் இல்லாததால், விசாரணை பாதிக்கப்படுவதுடன், புகார்தாரர்களுக்கு இடையே தகராறு ஏற்படுவது, வாடிக்கையாக உள்ளது. எனவே, கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, புதிய கட்டடம் அல்லது இட வசதி உள்ள இடத்துக்கு மாற்ற, மாவட்ட காவல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X