பிளாஸ்டிக் குடோனில் தீ : ரூ.5 லட்சம் பொருட்சேதம் | நாமக்கல் செய்திகள்| A fire in a plastic cotton caused a property damage of Rs.5 lakh | Dinamalar
பிளாஸ்டிக் குடோனில் தீ : ரூ.5 லட்சம் பொருட்சேதம்
Added : மார் 20, 2023 | |
Advertisement
 

பள்ளிபாளையம்: பிளாஸ்டிக் குடோனில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் நாசமாகின.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த திருச்செங்கோடு சாலையில், ராஜகுரு, 45, என்பவர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் நடத்துகிறார். அதன் ஒரு பகுதியில், பிளாஸ்டிக் கழிவு, பழைய இரும்பு பொருட்களை சேகரித்து வைத்திருந்தார். மற்றொரு பகுதியில், புது பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை நடத்துகிறார். குடோனில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு தீப்பிடித்து எரியத்தொடங்கியது. மக்கள் தகவல்படி வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் செங்குட்வேலு தலைமையில் வீரர்கள் சென்று, 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. பள்ளிபாளையம் போலீசார், வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X