பஸ் ஸ்டாப்பில் இருக்கைகள் அமைக்க வேண்டுகோள் | கரூர் செய்திகள்| Request to set up seats at bus stop | Dinamalar
பஸ் ஸ்டாப்பில் இருக்கைகள் அமைக்க வேண்டுகோள்
Added : மார் 20, 2023 | |
Advertisement
 

கரூர்: கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செம்மடை பஸ் ஸ்டாப்பில், எம்.பி., நிதியின் கீழ், பல ஆண்டுகளுக்கு முன், பயணிகள் வசதிக்காக, நிழற்கூடம் அமைக்கப்பட்டது. அதில் இருந்த இருக்கைகள் உடைந்த நிலையிலும், சில இருக்கைகளை மர்ம நபர்கள் திருடியும் சென்றுவிட்டனர். இதையடுத்து, புதிய இருக்கைகள் அமைக்கப்படவில்லை. இதனால்,
மண்மங்கலம், வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம், பரமத்தி வேலுார் பகுதிகளுக்கு செல்ல, பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள், நீண்ட நேரம் நின்று அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, செம்மடை பஸ் ஸ்டாப், நிழற்கூடத்தில் புதிதாக இருக்கைகள் அமைக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X