பட்டாபிராம்,:திருவள்ளூர் வரதராஜபுரத்தை சேர்ந்த பொறியாளர் கோபாலகிருஷ்ணன், 32. இவர் அரசு டெண்டர் வாயிலாக, பட்டாபிராம் அடுத்த அமுதுார் மேடு கிராமத்தில், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை திரும்பிச் சென்று பார்த்த போது, பணி நடக்கும் இடத்தில் வைத்திருந்த 10 இரும்பு முட்டுகள் திருடு போனது தெரிந்தது. இது குறித்து புகாரின்படி, பட்டாபிராம் போலீசார் விசாரித்தனர்.
அதில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன், 19, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன், 19 , அருண், 20, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த லாபான், 28, பூந்தமல்லியை சேர்ந்த பாலகணேஷ், 26, ஆகியோரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.