12 ஆண்டுக்கு பின் அண்ணாநகர் 'டவர்' பூங்கா திறப்பு : ஒரு வாரம் இலவச அனுமதி
Added : மார் 21, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Annanagar Tower Park reopens after 12 years: One week free admission   12  ஆண்டுக்கு பின் அண்ணாநகர் 'டவர்' பூங்கா திறப்பு : ஒரு வாரம் இலவச அனுமதி

அண்ணா நகர்: அண்ணா நகர் 'டவர்' பூங்காவில், 12 ஆண்டுகளுக்கு பின், கோபுர 'டவர்' நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

அண்ணா நகரின் மையப்பகுதியில், 15.5 ஏக்கர் பரப்பளவில், டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா பரந்து விரிந்துள்ளது. இங்கு, 138 அடி உயரம் மற்றும், 42 மீட்டர் அகலம் உடைய டவர் எனப்படும் கோபுரம், முதல் முதலாக 1968ல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.

கோபுரத்தின் மீது ஏறி காதல் ஜோடிகள் உள்ளிட்டோர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்தது. இதனால், கோபுரத்தில் ஏற, 2011 முதல் தடை விதிக்கப்பட்டு, பூட்டிக் கிடந்தது.

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, 97.60 லட்சம் ரூபாய் மூலதன நிதியில் பூங்கா மறுசீரமைக்கப்பட்டது. அதில், கோபுர டவர் சீரமைக்கப்பட்டது. அதன் 13 தளங்களிலும் பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து, வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டன.

சீரமைக்கப்பட்ட டவரை, நேற்று மாலை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ், அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

திறப்பு விழா மாலை, 5:00 மணிக்கு மேல் நடந்ததால், பொதுமக்கள் டவரில் ஏற அனுமதிக்கவில்லை. இதனால், ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.



ஒரு வாரம் இலவசம்

அண்ணா நகர் மண்டல அதிகாரிகள் கூறியதாவது:சீரமைப்பு பின், 'டவர்' பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பார்வையிடுவதற்கான கட்டணம் குறித்து அரசு முடிவு எடுக்கும். தற்போது, ஒரு வாரத்திற்கு மக்கள் இலவசமாக பார்வையிடலாம்.காலை 7:00 மணி முதல் மாலை, 6:30 மணிவரை டவரில் ஏறி சென்னையை ரசிக்க, தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.




ஒரு வாரம் இலவசம்

அண்ணா நகர் மண்டல அதிகாரிகள் கூறியதாவது:சீரமைப்பு பின், 'டவர்' பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பார்வையிடுவதற்கான கட்டணம் குறித்து அரசு முடிவு எடுக்கும். தற்போது, ஒரு வாரத்திற்கு மக்கள் இலவசமாக பார்வையிடலாம்.காலை 7:00 மணி முதல் மாலை, 6:30 மணிவரை டவரில் ஏறி சென்னையை ரசிக்க, தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.




பல ஆண்டுகளுக்கு பின் அண்ணா நகர் டவர் திறப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் சிறு வயதில் வந்திருந்தேன். தற்போது, எனக்கு திருமணமாகி என் குழந்தையுடன் வந்தேன். அடுத்த தலைமுறைக்கு மக்கள் நல்ல முறையில் டவரை பயன்படுத்த வேண்டும்.

- எஸ்.சுவேதா, 23, அண்ணா நகர்




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X