குடிநீர் சப்ளையில் கவனம் வேண்டும்! அலுவலர், ஊழியர்களுக்கு 'அட்வைஸ்'
Added : மார் 21, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Pay attention to the water supply! Advice for officers and employees   குடிநீர் சப்ளையில் கவனம் வேண்டும்! அலுவலர், ஊழியர்களுக்கு 'அட்வைஸ்'

திருப்பூர்:நடப்பு மாதம் மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் நடைபெற்ற மண்டலக்குழு கூட்டங்களில் பேசிய வார்டு கவுன்சிலர்கள், குடிநீர் சப்ளையில் நிலவும் பல்வேறு சிக்கல்கள் குறித்து குறிப்பிட்டனர். குடிநீர் சப்ளையில் ஊழியர் பற்றாக்குறை; ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மாற்றாக ஊழியர் நியமிக்க வேண்டும்; திட்டக்குடிநீர் வினியோகப் பணியில் உள்ள ஊழியர்கள் ஆழ்குழாய் கிணற்று நீர் வழங்கும் பணியையும் கூடுதலாக கவனிக்க வேண்டும்; ஊழியர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண வேண்டும்; சுழற்சி முறையில் உரிய சப்ளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனால், இப்பிரச்னை குறித்து ஆலோசித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து நேற்று மாலை, மாநகராட்சி கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள் கோவிந்தசாமி, கோவிந்தராஜ். உமா மகேஸ்வரி, உதவி கமிஷனர்கள், குடிநீர் பிரிவு அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

கடந்தாண்டு குடிநீர் அளவு குறைவாக பெற்ற நிலையிலும், முறையாக குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது தேவையான அளவு குடிநீர் இருந்தும் சப்ளையில் குறைபாடு நிலவுகிறது. நான்கு முறை சப்ளை செய்ததாக பதிவு செய்யப்பட்ட பகுதிகளில் இரு முறை மட்டுமே சப்ளை நடைபெற்றுள்ளது.

கடந்த நான்கு மாதம் முன்னரே, குடிநீர் பணிகள் குறித்து கூட்டம் நடத்தி, மண்டல வாரியாக உதவி பொறியாளர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள், தங்கள் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை.

எனவே, குடிநீர் வழங்குவதை முறையாக நிறைவேற்றினால் பெருமளவு பிரச்னை குறைந்து விடும். அதில் முழு ஈடுபாட்டுடன் அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

குழாய் உடைப்புகள் சரி செய்ய நிதி ஒதுக்கீடு, ஊழியர்கள் வழங்கியும், குழாய் உடைப்பு சரி செய்யாமல் குடிநீர் வீணாவதும், இதனால், மக்கள் அவதிப்படுவதும் சகஜமாக உள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X