பறவைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு வேண்டும்; உலக சிட்டுக்குருவிகள் தினத்தில் வலியுறுத்தல்
Added : மார் 21, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Awareness to protect birds is emphasized on World Sparrow Day   பறவைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு வேண்டும்;  உலக சிட்டுக்குருவிகள் தினத்தில் வலியுறுத்தல்



மதுரை, : பொதுமக்களுக்கு பறவைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வேண்டும்' என, மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் நடந்த உலக சிட்டுக்குருவிகள் தினவிழாவில் பேசினர்.

கல்லுாரியின் விலங்கியல் முதுகலை, ஆராய்ச்சி துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். மாணவர்கள் 50க்கும் மேற்பட்ட கூடுகளை தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கினர்.

பேராசிரியர் ராஜேஷ் கூறியதாவது:

2013ல் இருந்து 10 ஆண்டுகளாக கூடுகள் செய்து பொதுமக்களுக்கு வழங்குகிறோம். இதனால் பறவைகளின் மீதுமக்களுக்கு அக்கறை ஏற்படும். இதன்மூலம் கூடல்நகர், செல்லுார், ஜெய்ஹிந்துபுரம் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் பயனடைந்துள்ளன.

தற்போது சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அலைபேசி கோபுரங்களால் அவை பாதிக்கப்படுவதில்லை.

வயல்களில் உபயோகிக்கும் பூச்சிக்கொல்லிகளால் பாதித்த புழுக்களை சிட்டுக்குருவிகள் உண்கின்றன. அதனால் கால்சியம் சத்து குறைந்து, முட்டை ஓடுகள் வலுவிழந்து குருவிகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. மக்களுக்கு பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேயா நற்பணி மன்றம் சார்பில் சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு நடத்தினர். மாணவர்கள், மன்ற உறுப்பினர் சரவணன் பங்கேற்றனர்.

ஒருங்கிணைப்பாளர் யோகேஸ்வரன் கூறியதாவது: வெயில் காலங்களில் பறவைகளுக்கு நீர் அவசியம்.

அதற்காக மட்பாண்டங்கள், கூடுகள் பள்ளிக்கு வழங்கப்பட்டன.

முன்பு கூரை, ஓட்டு வீடுகள், மரங்கள் இருந்ததால் அதில் கூடுகட்டின. ஆனால் தற்போது மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல ஆண்டுகளாக பறவைகளுக்கு தினமும் மாடியில் தண்ணீர் வைக்கிறோம், என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
subash -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-202313:00:31 IST Report Abuse
subash stop using mobile beautiful voice chiittukurvi will sit in every house window, back to keypad phone
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X