மதுரை, : மதுரை நகர் ஆயுதப்படை மருத்துவமனையில் போதிய ஆட்கள் இல்லாததால் போலீசாருக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
போலீசாருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இம்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரு டாக்டர்கள், நர்ஸ் உள்ளனர். உதவிக்கு பெண் போலீஸ் ஒருவர் உள்ளார்.
தினமும் காலை 9:30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இதன் பிறகு இரவு 7:00 மணி வரை நர்ஸ் மட்டுமே அனைத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. இரவு மருத்துவமனை இயங்காததால் அரசு, தனியார் மருத்துவமனைக்குதான் போலீசார் செல்ல வேண்டும்.
போதிய ஆட்கள் நியமிக்கப்படாததால் சிகிச்சை அளிப்பதிலும், முறையான பரிசோதனை செய்வதிலும் சிக்கல் நீடிக்கிறது. நகர், மாவட்டம், பட்டாலியன் போலீசார் அனைவருக்குமான இம்மருத்துவமனையில் போதிய ஆட்களை நியமித்தும், நவீன மருத்துவ கருவிகளுடனும் 24 மணி நேரம் செயல்படும் வகையில் கமிஷனர் நரேந்திரன் நாயர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீசார் கூறுகையில், ''போலீசார் மட்டுமின்றி தீயணைப்பு வீரர்களுக்கும் இம்மருத்துவமனை பயன்பட உள்ளது. அதற்கேற்ப போதுமான ஆட்களை நியமிக்க வேண்டும். மருத்துவ கருவிகளை அமைக்க வேண்டும்.
24 மணி நேரமும் இயங்கினால்தான் இம்மருத்துவமனை அமைத்ததற்கான பலன் கிடைக்கும்'' என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.