போதை பயன்படுத்தும் மாணவர்கள் ரத்த தானத்திற்கு தகுதியற்றவர்கள்! அவசர தேவைக்கு ரத்தமின்றி தவிக்கும் அபாயம்
Added : மார் 21, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Ineligible *Drug users for blood donation *Risk of running out of blood for urgent need  போதை பயன்படுத்தும் மாணவர்கள் ரத்த தானத்திற்கு தகுதியற்றவர்கள்! அவசர தேவைக்கு ரத்தமின்றி தவிக்கும் அபாயம்

தேனி : கல்லுாரி மாணவர்கள் போதை வஸ்துக்கள் பயன்படுத்துவதாலும், மாணவிகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு வருவதால் ரத்ததானம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பிரசவம், விபத்துக்களில் சிக்குவோருக்கு ரத்த தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக்கல்லுாரி, பெரியகுளம், கம்பம் அரசு மருத்துவமனைகள் என 3 ரத்தவங்கிகள் இயங்குகின்றன. இதில் பிரசவங்கள், விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற நாள் ஒன்றுக்கு சராசரியாக 52 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. இது அவரவர் ரத்த வகைகளுக்கு ஏற்ப மாறுபடும். ரத்தவங்கிகள் ரத்ததான முகாம்கள் மூலமாகவும், ரெட் கிராஸ், ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்புகளிடம் இருந்து ரத்த தானம் பெறுவது வழக்கம். மாவட்டத்தில் பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லுாரிகள் 60 இயங்குகின்றன.


இக் கல்லுாரிகளில் கடந்த 6 மாதங்களாக நடந்த ரத்ததான முகாம்களில் 98 சதவீத மாணவர்கள் ரத்த தானம் வழங்க தகுதியற்றவர்களாக உள்ளது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அதாவது ரத்த தானம் செய்வோர் 24 மணிநேரத்திற்குள் மது போதை வஸ்துக்கள் பயன்படுத்தியிருக்க கூடாது. போதை வஸ்து பயன்படுத்தியவர்களின் ரத்தத்தில் ஹூமோகுளோபின் அளவு குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் ரத்த தானத்திற்கு தகுதியற்றவர்களாவார்கள்.

கல்லுாரி மாணவிகளில் 88 சதவீதம் பேர் காலை உணவு உரிய நேரத்திற்கு எடுத்து கொள்ளாதவர்கள், இருப்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் ரத்தசோகை அனீமியாவால் பாதிக்கப்பட்டுகின்றனர். இவர்களும் ரத்ததானத்திற்கு தகுதியற்றவர்களாக உள்ளனர். இப் பரிசோதனை முடிவால் ரத்த வங்கி நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்தியன் ரெட் கிராஸ் கவுரவச் செயலாளர் சுருளிவேல் கூறுகையில், ‛இதற்கு முந்தைய ஆண்டுகளில் கல்லுாரி மாணவர்கள், மாணவிகளின் நிலை இவ்வாறு இருந்தது. தற்போது அதீத போதை பழக்கமும், கல்லுாரி மாணவிகளுக்கு ஏற்படும் ரத்த சோகையும் ரத்ததானத்திற்கு தகுதியற்றவர்களாக மாற்றிவருகிறது.
இந்நிலை மாற மாவட்டத்தில் உள்ள 60 கல்லுாரிகளில் ஆண்டுக்கு இரு முறை முழு உடல் பரிசோதனை செய்து ரத்தானத்திற்கு தகுதியானவர்களாக மாற்ற வேண்டும். இல்லையெனில் நமது தேவைக்கு ரத்த தானம் பெற இயலாத நிலைக்கு தள்ளப்படுவோம்.', என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X