கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி ரோட்டில் பாலை கொட்டி போராடிய விவசாயிகள்
Added : மார் 21, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Farmers protested by spilling milk on the road demanding increase in purchase price   கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி ரோட்டில் பாலை கொட்டி போராடிய விவசாயிகள்



உசிலம்பட்டி : பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி செல்லம்பட்டி அருகே சக்கரைப்பட்டியில் உற்பத்தியாளர்கள் மாடுகளுடன் வந்து ரோட்டில் பாலைக் கொட்டி போராட்டம் நடத்தினர்.

ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் விலையாக உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ. 32 வழங்குகிறது. தனியார் நிறுவனங்களோ ரூ.42 வழங்குகின்றன. பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு வழங்கும் அளவை குறைத்து அனுப்பிவிட்டு, மீதி பாலை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

இதனால் ஆவினுக்கு வழங்கப்படும் பாலின் அளவு குறைகிறது. ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி தர வேண்டும். அல்லது தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் சங்கம், நலச்சங்கத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

நேற்று செல்லம்பட்டி அருகே சக்கரைப்பட்டியில், மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பெரியகருப்பன், செயலாளர் உக்கிரபாண்டி, பொருளாளர் இன்பராஜ் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் மாடுகளுடன் வந்தனர். கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். கையோடு கொண்டு வந்த பாலை ரோட்டில் கொட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். வாலாந்துார் போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். இதனால் உசிலம்பட்டி-மதுரை ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X