ஹிந்து தர்ம எழுச்சி மாநாட்டுக்கு அனுமதி கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
Updated : மார் 21, 2023 | Added : மார் 21, 2023 | கருத்துகள் (13) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

மதுரை: ஹிந்து மக்கள் கட்சி சார்பில் துாத்துக்குடியில் நடைபெற உள்ள சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநில மாநாட்டிற்கு அனுமதி கோரிய வழக்கில், மனுவை தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ஹிந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் தாக்கல் செய்த மனு:
ஹிந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநில மாநாடு துாத்துக்குடி அபிராமி மகாலில் ஏப்.,1ல் துவங்கும்.



latest tamil news



வள்ளலாரின் அவதார விழா, மேல் மருவத்துார் ஆதிபராசக்தி பூஜை, பெண்கள் கருத்தரங்கு, சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்குதல் நடைபெறும். துறவிகள், ஆதினங்கள் ஆசி வழங்குகின்றனர். கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர்.
ஏப்.,2 ல் டூவிபுரத்தில் ஊர்வலம் துவங்கி, சிதம்பர நகர் பஸ் ஸ்டாண்டில் நிறைவடையும். அருகே பொதுக்கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் இல்லை. இம்மாநாடு ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது.

மாநாடு, ஊர்வலம், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை செயலர்,டி.ஜி.பி., துாத்துக்குடி கலெக்டருக்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு வசந்தகுமார் குறிப்பிட்டார்.

நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார்.
தமிழக அரசு தரப்பு:அனுமதிக்கும் பட்சத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம், ஸ்டெர்லைட் ஆதரவு, எதிர்ப்பு ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி:மனுவை அரசு தரப்பில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
DVRR - Kolkata,இந்தியா
21-மார்-202317:30:10 IST Report Abuse
DVRR இந்து, கோவில், ஆர் எஸ் எஸ் என்ற பெயர் எங்கு இருந்தாலும் அவர்கள் என்ன கேட்டாலும் அதற்கு எதிராகத்தான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம், ஆனால் சர்ச் மசூதி க்ரித்துவன் முஸ்லிம் இவர்களுக்கு எதிரக ஒருக்கலும் நடக்கமாட்டோம் என்று ஏசு மீது அல்லா மீது சத்தியம் செய்வோம்
Rate this:
Cancel
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
21-மார்-202314:04:54 IST Report Abuse
NALAM VIRUMBI இந்து மத சம்பத்தப்பட்ட எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்து விடும் .... ஏனென்றால் இங்கு நடப்பது ,.... ஆட்சி. ஓட்டளித்த இந்து மூடர்களே காதில் விழுந்ததா?
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
21-மார்-202313:48:17 IST Report Abuse
Sampath Kumar நல்ல முடிவு இதே அவனுக ஜுட்ஜ்க இருந்தால் மண்டையை ஆட்டி உத்தரவு போட்டு இரப்பர் இந்த கட்சி ஏன் மற்ற மாநிலத்தில் மாண்டு நடத்த வில்லை அங்கே விரட்டி அடித்து உள்ளார்களா ? பக்கத்து மாநிலம் கர்நாடகாவில் உங்க ஆட்சி தானே நடக்குது அங்கே பொய் உங்களால் நடத்த முடியாத? முடியும் ஆனல் சவ்ய மாட்டார்கள் இங்கு தான் ரகசியம் ஒளிந்து உள்ளது அதை தமிழ் நாடு அரசு புரிந்து உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X