மின் கட்டண உயர்வு குறைக்கப்படாதது ஏமாற்றம் : தொழில் வர்த்தக சங்கம் கருத்து
Added : மார் 21, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Disappointment over power tariff hike not reduced Industry trade association opined   மின் கட்டண உயர்வு குறைக்கப்படாதது ஏமாற்றம் : தொழில் வர்த்தக சங்கம் கருத்து



மதுரை : சிறு,குறு, நடுத்தர தொழில்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வு குறைக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது என தமிழக பட்ஜெட் பற்றி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கருத்து தெரிவித்துள்ளார்.



அவர் கூறியிருப்பதாவது:

மதுரையை மேம்படுத்த எழில்மிகு மாமதுரை திட்டம், 3.5 லட்சம் புத்தகங்களுடன் மதுரையில் கருணாநிதி நினைவு நுாலகம், 2.2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் விருதுநகர் சிப்காட் ஜவுளிபூங்கா, பல நகரங்களில் இலவச வைபை வசதி அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை.

மின்உற்பத்தியை அதிகரிக்க 14 ஆயிரத்து 500 மெகாவாட் புதிய திட்டங்களுக்கு ரூ.77 ஆயிரம் கோடி முதலீடு அறிவிப்பு, பசுமை மின் வாகன உற்பத்திக்கு முக்கியத்துவம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கிராமப்புற வேலைவாய்ப்புக்கு ரூ.800 கோடி செலவில் பத்தாயிரம் குளங்கள் துார்வாரப்படுவது, வருவாய் பற்றாக்குறை ரூ.16 ஆயிரம் கோடி குறைந்துள்ளதும் வரவேற்கத்தக்கது.

இருப்பினும் மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்தில் அண்டர் பாஸ் திட்டம் அறிவிக்கப்படாதது, சிறு,குறு, நடுத்தர தொழில்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வு குறைக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. சென்னையை தவிர்த்து மதுரையிலும் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்க தலைவர் ரத்தினவேலு: பட்ஜெட்டில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீத்தில் இருந்து 3 சதவீதமாக குறைத்தது பாராட்டுக்குரியது. இந்த நிதிவலிமை பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க வழிவகுக்கும். பொது வினியோக திட்டத்திற்கு ரூ.10 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு, உணவு, பாதுகாப்பு துறைக்கு ரூ.16 ஆயிரத்து 262 கோடி, நீர்பாசன நவீனமயமாக்கலுக்கு ரூ.462 கோடி என அறிவித்ததும் வரவேற்புக்குரியது.

சென்னை அம்பத்துாரில் ரூ.120 கோடி மதிப்பில் தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள், திறன்பயிற்சி மையம், ரூ. 25 கோடி மதிப்பில் தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் திட்டம், கிருஷ்ணகிரியில் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

நீண்டநாள் கோரிக்கையான ஜி.எஸ்.டி., உயர்மட்ட ஆலோசனைக்குழு அறிவிக்காதது ஏமாற்றமே.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X