அரூர்: அரூர், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று, 31.45 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து, 245 விவசாயிகள், 292 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 6,666 முதல், 7,486 ரூபாய் வரையும், டி.சி.எச்., ரகம் குவிண்டால், 8,009 முதல், 8,366 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 292 குவிண்டால் பருத்தி, 20.45 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், 150 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 7,149 முதல், 8,119 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 150 குவிண்டால் பருத்தி, 11 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.