செஞ்சி பகுதியில் திரிந்த கரடி மயங்கிய நிலையில் மீட்பு
Added : மார் 22, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Rescue of stray bear in red state   செஞ்சி பகுதியில் திரிந்த கரடி மயங்கிய நிலையில் மீட்பு



செஞ்சி: செஞ்சி அருகே சுற்றித் திரிந்த கரடியை, மயங்கிய நிலையில் வனத்துறையினர் மீட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வனச்சரகத்திற்குட்பட்ட முட்டுகாடு வனப்பகுதியில் கடந்த 15 நாட்களாக கரடி சுற்றித் திரிந்தது. அருகில் உள்ள கிராமங்களில் கால்நடைகளைத் தாக்கியது. வனத் துறையினர் கரடியை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12:00 மணியளவில், பெருங்காப்பூர் மதுரா கோட்டிகல் பாறை கிராமத்தில் மாட்டுக் கொட்டகை அருகே கரடி இருப்பதாக செஞ்சி வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

வனச்சரகர் வெங்கடேசன், வனவர் சதீஷ், வனக்காப்பாளர்கள் வெங்கடேசன், சுரேந்திரன், ராஜாராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அங்கு, கரடி மயங்கி நிலையில் கிடந்தது. செஞ்சி கால்நடை மருத்துவர் செந்தில்குமார் பரிசோதனை செய்ததில் கரடியின் இருதய துடிப்பு குறைவாக இருப்பது தெரியவந்தது. நேற்று காலை கரடி செஞ்சி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஸ்ரீகுமார் மற்றும் வண்டலுார் கால்நடை மருத்துவர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் செஞ்சிக்கு வந்தனர்.

இருதய துடிப்பை கண்காணிக்கும் கருவி பொருத்தி கரடிக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். தொடர் சிகிச்சைக்காக வண்டலுார் வன உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.



வளர்ப்பு கரடி

செஞ்சி காப்பு காட்டில் கரடிகள் இல்லை. நேற்று பிடிபட்ட கரடியின் கழுத்தில் பட்டை இருந்தது. இதனால் கரடியை வைத்து வித்தை காட்டியவர்களோ, தாயத்து விற்பவர்களோ பராமரிக்க முடியாமல் செஞ்சி காட்டில் விட்டுச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.




மாடுகளுடன் சண்டை

மாட்டு கொட்டகை அருகே மயங்கிக் கிடந்த கரடி மாடுகளுடன் சண்டையிட்டுள்ளது. அங்கிருந்த 2 மாடுகளுக்கும், கரடிக்கும் காயம் உள்ளது. வளர்ப்பு கரடி என்பதால் அதற்கு பழகிய உணவு காட்டில் கிடைக்காததால் பசியாலும் மயங்கி இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X