காப்பகத்தில் மீட்கப்பட்டவர்களிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை
Added : மார் 22, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Human Rights Commission investigates those rescued from the shelter  காப்பகத்தில் மீட்கப்பட்டவர்களிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை



விக்கிரவாண்டி: குண்டலப்புலியூர் காப்பகத்தில் மீட்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் மாற்றுத் திறனாளிகளிடம், தேசிய மனித உரிமை ஆணையக்குழு உறுப்பினர்கள் ரகசிய விசாரணை நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூரில் 'நல்ல சமேரியர் சாரிட்டபிள் டிரஸ்ட்' சார்பில் அனுமதியின்றி காப்பகம் இயங்கி வந்தது. இந்த காப்பகத்தின் மீது எழுந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில், காப்பக நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு குழந்தை, 33 பெண்கள் உட்பட 143 பேர் மீட்கப்பட்டனர்.

அவர்கள் விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிலர் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையக் குழு நேற்று காலை 10:20 மணிக்கு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தது.

ஆணைய உறுப்பினர்கள் சுனில்குமார் மீனா, பட்டில் கேட்டன் பலிராம், ஏக்தா பக்வித்தா, மோனியா உப்பல், சந்தோஷ்குமார், பிஜூ ஆகிய 6 பேர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இக்குழுவினர் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டிருந்த 6 பெண்கள் உட்பட 20 பேரிடம் தனித்தனியாக ரகசிய விசாரணை நடத்தினர்.

காப்பகத்தில் நடத்தப்பட்ட விதம், வன்கொடுமை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்தனர்.

உணவு இடைவேளைக்கு பின் மாலை 3:30 மணிக்கு விசாரணை மீண்டும் தொடர்ந்தது. விசாரணையின் போது கலெக்டர் பழனி, மருத்துவக் கல்லுாரி டீன் கீதாஞ்சலி, தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், அரசு அதிகாரிகள், போலீசார் என யாரையும் அனுமதிக்கவில்லை.



ஜாமின் கோரி மனு




குண்டலபுலியூர் காப்பக முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட ஏழு பேர், ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

மனுவில், 'மனநலம் பாதித்து, சாலைகளில் திரிவோரை போலீசார் உதவியுடன் மீட்டு சிகிச்சை அளிக்கிறோம். எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை' என, கூறியுள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X