நள்ளிரவில் பள்ளம் தோண்டி பூஜை பண்ருட்டி அருகே பரபரப்பு
Added : மார் 22, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Digging a hole in the middle of the night and causing a commotion near Panruti  நள்ளிரவில் பள்ளம் தோண்டி பூஜை பண்ருட்டி அருகே பரபரப்பு




பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த வி. ஆண்டிக்குப்பம் பகுதியில், நள்ளிரவில் பள்ளம் தோண்டி பூஜை நடத்திய சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பம் சிவன்படை தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சம்மந்த மூர்த்தி, 47. இவர் மொரிஷீயஸ் நாட்டில் உள்ள சிவன் கோவிலில் பணிபுரிந்து வருகிறார்.

இவர், தந்தை பெருமாளுக்கு பூர்வீக சொத்தான 70 ஆண்டு பழமையான வீட்டை இடித்து அகற்றினார். பின்னர் அந்த இடத்தை நான்கு புறமும் துணிகளால் மறைத்து, 6 அடி அளவிற்கு பள்ளம் தோண்டி பலகை போட்டு மூடி வைத்திருந்தார்.

பள்ளம் தோண்டிய இடத்தில், நேற்று முன்தினம், பூஜை செய்யும் சத்தம் கேட்டதாகவும், நரபலி ஏதேனும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் புகார் செய்தனர். அதன்பேரில் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பள்ளத்தில் பூஜை செய்ததற்கான அறிகுறியாக மஞ்சள், சிவப்பு, எலுமிச்சை உள்ளிட்ட பொருட்கள் கிடந்தன.

சம்மந்த மூர்த்தி கூறுகையில் 'எனது தங்கை ருக்மணி மீது சுவாமி அருள் வந்து, வீட்டின் மனையில் 4 இடங்களில் சுவாமி சிலை உள்ளதாக கூறினார். அதன்பேரில் பள்ளம் தோண்டி தேடினோம். ஆனால் தோண்டத் தோண்ட சுவாமி சிலை கீழே சென்று விடுகிறது. அமாவாசை அன்று தோண்டினால் சிலை கிடைக்கும்' என்றார்.

'சிலை இருப்பதாகக் கூறி சம்மந்த மூர்த்தி மோசடியில் ஈடுபட முயற்சிக்கலாம்' என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து, வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள், கலெக்டர் அனுமதி பெற்று தான் தோண்ட வேண்டும் என கூறி, பள்ளத்தை மூடினர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X