மாணவர் கொலையில் 5 பேர் சரண்; 5 பேர் தலைமறைவு
Added : மார் 22, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
5 people surrender in student murder and 5 people are absconding   மாணவர் கொலையில் 5 பேர் சரண்; 5 பேர் தலைமறைவு



மேலுார் : மேலுார் கோட்டைப்பட்டி விலக்கருகே கல்லுாரி மாணவர் வாசுதேவன் 19, கொலை வழக்கில் 5 பேர் சரணடைந்தனர். 5 தலைமறைவாக உள்ளனர்.

மேலுார் அரசு கல்லுாரி இரண்டாம் ஆண்டு வணிகவியல் மாணவர் கம்பாளிபட்டி வாசுதேவன். நேற்று முன்தினம் சக நண்பர் பாலகண்ணனுடன் டூவீலரில் சென்றபோது நான்குவழிச்சாலையில் 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கொலை செய்தது. பாலகண்ணன் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் நேற்று வஞ்சிநகரம் வி.ஏ.ஓ., கல்யாணிமுத்துவிடம் மேலுார் பிரேம்குமார் 22, சுதர்சன் 20, கஸ்துாரிபாய் நகர் வீரா 19, சரவண புகழ் 25, முத்தமிழ் நகர் தனுஷ் 20, ஆகியோர் சரணடைந்தனர். 5 பேர் தலைமறைவாக உள்ளனர்.

இதற்கிடையே நேற்றுமுன்தினம் வாசுதேவன் உடலுடன் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கம்பாளிபட்டி குமார் 45, அழகேசன் 34, முருகன் 48, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

போலீசார் கூறியதாவது:

பிப்.,18ல் கம்பாளிபட்டி அருகே இடவாபாறை வாழைகருப்பு சுவாமி கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியில் மதுபோதையில் பிரேம்குமார் தரப்புக்கும், கம்பாளிபட்டி கதிரவன், உறவினர் வாசுதேவன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை தாக்கிய வாசுதேவனை பழிவாங்க பிரேம்குமார் திட்டமிட்டார்.

இதையறிந்த வாசுதேவன் கல்லுாரிக்கு 20 நாட்களாக வரவில்லை. சில நாட்களாக அவர் கல்லுாரிக்கு வந்து செல்வதை அறிந்த பிரேம்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தார். இவ்வாறு கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X