நாச்சிக்குளத்தில் 400 ஏக்கர் சேதம்; காற்று, மழையால் பாதிப்பு
Added : மார் 22, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
400 acres damaged in Nachikulam; Affected by wind and rain   நாச்சிக்குளத்தில் 400 ஏக்கர் சேதம்; காற்று, மழையால் பாதிப்பு



சோழவந்தான்: சோழவந்தான் அருகே நாச்சிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் பெய்த கோடை ஆலங்கட்டி மழையால் நெற்பயிர்கள் சேதமாகிவிட்டது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.

கருப்பட்டி, இரும்பாடி, கீழநாச்சிகுளம், மேலநாச்சிக்குளம், பாலகிருஷ்ணாபுரம் பகுதிகளில் 800 ஏக்கரில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர்.

நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது. நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் 400 ஏக்கருக்கும் மேல் நெற்கதிர்கள் உதிர்த்து, தண்ணீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கினர்.

விவசாயி ஹக்கீம் கூறியதாவது:

இங்கு இரண்டாம் போக மகசூலுக்காக 3 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து பயிரிட்டேன். நாளை அறுவடை தருணத்தில் நேற்று பெய்த மழையால் பயிர்கள் மடிந்து நெல்மணிகள் உதிர்ந்து விட்டது. நெற் பயிர் மட்டும் உதிர்ந்து வைக்கோல் நிற்பதை பார்த்து திகைத்து விட்டேன், என்றார்.

விவசாய சங்க தலைவர் ரமேஷ் கூறியதாவது:

இப்பகுதியில் 1000 ஏக்கருக்கு மேல் இரண்டாம் போக சாகுபடியில் நெல் பயிரிட்டனர். ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில், கொள்முதல் மையம் அமைக்கும் பணியை தீவிரப் படுத்தினோம். இந்நிலையில் திடீரென பெய்த மழையால் 500 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர் பாழானது, என்றார்.

வி.ஏ.ஓ., கார்த்திக், தலையாரி சரவணகுமார், வேளாண் உதவி அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் சேதமடைந்த நிலங்களை பார்வையிட்டனர். விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க கலெக்டர் அனீஷ்சேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X