பிரச்னைகளில் இருந்துநிவர்த்தி பெற உதவுகிறது பகவத்கீதை: சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி பேச்சு
Added : மார் 22, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Bhagavad Gita helps to get rid of problems: Swami Jagatadmananda Saraswati talks   பிரச்னைகளில் இருந்துநிவர்த்தி பெற உதவுகிறது பகவத்கீதை: சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி பேச்சு



மதுரை : ''உலக வாழ்க்கை பிரச்னைகளில் இருந்து நிவர்த்தி பெற பகவத்கீதை உதவுகிறது'' என, ஆன்மிக சொற்பொழிவில் சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி பேசினார்.

மதுரை கல்லுாரியில் லலிதாம்பிகா அறக்கட்டளை சார்பில் பகவத்கீதை சொற்பொழிவு நடந்தது. கல்லுாரி முதல்வர்ராஜேந்திரன் தலைமை வகித்தார். பேராசிரியர்முரளி வரவேற்றார். பேராசிரியர்கள் நடராஜன், முத்துக்குமார் பேசினர்.

இதில் சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி பேசியதாவது:

வாழ்க்கை இருவகையாக உள்ளது. பறித்து உண்ணும்வாழ்க்கை. பகிர்ந்து உண்ணும் வாழ்க்கை. நாம் பகிர்ந்து உண்போராகஇருக்க வேண்டும். கண்முன் நிற்கும் தாய், தந்தையரே இறைவன்.இயங்கும் எல்லாவற்றுக்கும் அச்சாரமாக, இருந்து நம்மை இயக்குபவன் இறைவன். ஈஸ்வரன் என்பது ஆன்மா. அது நம்முள் இருக்கக்கூடியது. எல்லா அறிவியலும் பொருளை அடிப்படையாகக் கொண்டது.

சாஸ்திரம் என்றால் அறிவியல். அறிவு சார்ந்தவற்றுக்கு விடுதலை கொடுப்பதே சாஸ்திரம். மகிழ்ச்சியாக இருக்க ஏதேனும் வேண்டும் என்பது பிரவர்த்தி மார்க்கம். எதுவும் வேண்டாம் என்பது நிவர்த்தி மார்க்கம்.இரண்டையும் தேடுபவனுக்கு ஒருபோதும் மகிழ்ச்சி கிடையாது.

பகவத்கீதை, வாழ்க்கை பிரச்னைகளில்இருந்து நிவர்த்திபெற உதவுகிறது. நாம் மனதாலும்,பேச்சாலும் பிறருக்கு துன்பம் கொடுக்காமல் இருப்பதே ஞானம். ஆன்மாவை அறிந்து கொள்ள ஞானம், கல்வி, உடல், புத்தி தேவை.

இந்த உலகம் பொய்யானது. இந்த உலகம் நிரந்தரமற்றது. எது நிரந்தரமோ அது நிலை இல்லாதது. இந்த உலகை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் ஞானம் வேண்டும். அது கீதையில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X