'விவசாயிகளை ஏமாற்றும் தமிழக வேளாண் பட்ஜெட்'
Updated : மார் 22, 2023 | Added : மார் 22, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

கோவை: தமிழக வேளாண் பட்ஜெட், வெறும் அறிவிப்புகளால் நிறைந்திருக்கிறது. ஆனால், விவசாயிகளுக்கு ஏதுமில்லை என, உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார்.



latest tamil news



அவர் கூறியதாவது:
தேர்தல் அறிக்கையைப் போல, ஏராளமான அறிவிப்புகள் நிறைந்த பட்ஜெட். ஆண்டறிக்கை வாசிப்பதைப் போல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் எதிர்பார்த்த கரும்புக்கு 4,000 ரூபாய், நெல்லுக்கு 2,500 ரூபாய் அறிவிக்கப்படவில்லை. தக்காளி, வெங்காயத்துக்கு விலை கிடைக்க நடவடிக்கை இல்லை.

இன்று (மார்ச் 21) ஒட்டன்சத்திரம் சந்தையில், விவசாயிகளிடம் தக்காளி பறிக்கவோ, கொண்டுவரவோ வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அந்த அளவுக்கு விலை சரிந்து விட்டது.
வெங்காயம், தக்காளியைப் பயிரிட ஊக்குவிக்க பணம் ஒதுக்கும் அரசு, அவற்றை சந்தைப்படுத்தி போதுமான விலை கிடைக்கச் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.






அத்தனை அறிவிப்புகளும் விவசாய பொருட்களை உற்பத்தி செய்ய ஊக்குவிப்பதாக மட்டுமே அமைந்துள்ளதே தவிர, விளைபொருட்களுக்கு விலை கிடைக்க நடவடிக்கை இல்லை.
வேளாண் தொழிலுக்கு வணிக வங்கிகளில் பெற்ற கடன் தொடர்பாக அறிவிப்பு ஏதும் இல்லை. எனவே, விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக இது உள்ளது. சில அறிவிப்புகள் ஏற்கெனவே நடந்து கொண்டிருப்பவைதான்.

வெளியில் இருந்து பார்ப்போருக்கு, இந்த பட்ஜெட்டில் விவசாயத்துக்கு கொட்டிக் கொடுத்தது போல தெரியும். உண்மையில் களத்து மேட்டுக்கு வந்து சேரும் அறிவிப்பு ஒன்றுமே இல்லை.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
Selvakumar - திருநெல்வேலி ,இந்தியா
24-மார்-202314:58:40 IST Report Abuse
Selvakumar இந்தியவிவசாயிகள் ஒற்றுமையாக இருந்து குறைந்தது இரண்டு ஆண்டுகள் விவசாயிகளுக்கு தேவையான விலைபொருட்களை மட்டுமே விவசாயம் செய்ய வேண்டும், அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும், வியாபாரிகளும் ரூபாய்நோட்டுகளை தின்னட்டும்
Rate this:
Cancel
Ravi - oddanchatram,இந்தியா
22-மார்-202318:39:47 IST Report Abuse
Ravi ஒட்டன்சத்திரம் மொத்த விற்பனை மார்கெட்ல் தக்காளி விலை கிலோ ஐந்து ரூபாய் இன்று, இதில் கமிசன் 50பைசா வண்டிவாடகை 2ரூபாய்
Rate this:
Cancel
Chennai B.S - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
22-மார்-202315:19:23 IST Report Abuse
Chennai B.S வியர்வை சிந்தி வெயிலிலும் மழையிலும் உழைத்து விளைவித்த நெல் மணிகளை விற்பனை செய்ய தமிழ் நாடு நுகர் பொருள் வாணிப கழக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் அதை கொள்முதல் செய்ய 40 கிலோ கொண்ட ஒரு சிப்பதுக்கு ரூபாய் 40 முதல் 50 வரை லஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளது. தாங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது வாய்கிழிய பேசிய திமுக தற்பொழுது ஆட்சியில் என்ன செய்துகொண்டுள்ளது? விளைவித்த பொருளுக்கு நியாயமான விற்பனை விலைஇல்லாமல் விவசாயிகள் வேதனை அடைகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X