சந்தைக்கேற்ற சாகுபடி; விழிப்புணர்வு தராத பட்ஜெட்! விலை ஏற்றத்தாழ்வு தொடரும் என விவசாயிகள் கவலை
Added : மார் 22, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Commercial Cultivation; A budget that does not give awareness! Farmers are worried that price disparity will continue   சந்தைக்கேற்ற சாகுபடி; விழிப்புணர்வு தராத பட்ஜெட்!  விலை ஏற்றத்தாழ்வு தொடரும் என விவசாயிகள் கவலை



திருப்பூர் : 'வேளாண் பட்ஜெட்டில் பல அறிவிப்பு இடம் பெற்றாலும், சந்தைக்கு ஏற்ற சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது' என விவசாயிகள் தெரிவித்தனர்.

தமிழக சட்டசபையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளண் பட்ஜெட்டில், பல கோடி ரூபாய் மதிப்பில் பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் 'கரும்பு, நெல்லுக்கான கொள்முதல் விலையில் திருப்தியில்லை; தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட விளை பொருட்களின் சாகுபடியை ஊக்குவிக்கவும், ஆண்டு முழுவதும் அவை கிடைப்பதற்கு வழிவகை ஏற்படுத்தவும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ள அரசு, அவற்றின் சந்தை விலைக்கு உத்தரவாதம் கொடுக்கும் அறிவிப்பு எதுவும் வழங்கவில்லை' என்பது விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் நல்லசாமி கூறியதாவது:


இஸ்ரேல் போன்ற நாடுகளில், அந்தந்த காலநிலை, பருவ நிலை, சந்தை நிலவரம் மற்றும் மக்களின் தேவைக்கேற்ப, பயிர் சாகுபடி முறையை கற்பிக்கின்றனர். அதற்கேற்ப விவசாயிகளும் பயிர் சாகுபடி செய்கின்றனர்.

இதனால், விளை பொருளுக்கான விலை, அதிகபட்சம், 5 முதல், 10 ரூபாய் இடைவெளியில் மட்டுமே ஏற்றுத்தாழ்வுடன் இருக்கும். விவசாயிகளுக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை. ஆனால், தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி, 100 ரூபாய்க்கும் விற்கும். சில நேரம், ஒரு ரூபாய்க்கும் விற்கும்.

இந்த விலை ஏற்றுத்தாழ்வு தான், விவசாயிகள் நஷ்டமடைய காரணமாக உள்ளது. எனவே, விளை பொருட்களின் தேவை மற்றும் சந்தைக்கேற்ப சாகுபடி முறையை, விவசாயிகளுக்கு கற்றுத்தர வேண்டும்; கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இதுதொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறாதது, ஏமாற்றமே.

இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X