நீர் நிலைகள் மாசுபாடு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி மாணவன்
Added : மார் 22, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

கரூர்: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நீர் நிலைகள் மாசுபடுவதை தவிர்க்க, வலியுறுத்தி, கரூரை சேர்ந்த பள்ளி மாணவர், துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஆண்டுதோறும் உலக தண்ணீர் தினம் மார்ச் 22ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளை ஒட்டி, தண்ணீர் மாசுபடுவதை தவிர்க்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரூரில், தனியார் பள்ளி மாணவர், நேற்று, வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்த விஷ்வக் நித்தின், 14; வெங்கமேட்டில் உள்ள, தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், நீர்நிலைகளில் மனித கழிவு கலப்பதை தடுக்க வலியுறுத்தி, கரூர் அமராவதி ஆற்றை ஒட்டியுள்ள வீடுகளில், நேற்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இதுகுறித்து, மாணவர் விஷ்வக் நித்தின் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகள் இணைந்து, 'ஸ்வச் பாரத்' என்ற திட்டத்தின் கீழ், கழிப்பிடம் கட்ட, 12 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குகிறது. ஆனால், நீர் நிலைகளில் மனித கழிவுகள் கலக்கப்படுகிறது.
இதனால், உலகில் 200 கோடி பேருக்கு துாய்மையான குடிநீர் கிடைப்பதில்லை. துாய்மை இல்லாத குடிநீரை குடிப்பதால், ஓராண்டுக்கு பல லட்சக்கணக்கானோர்,
உயிரிழக்கின்றனர்.
உலகில் கடல் நீரை தவிர்த்து, மனிதர்கள் பயன்படுத்த கூடிய நிலத்தடி நீர், 2.5 சதவீதம் மட்டுமே உள்ளது. அதைதான், உலகம் முழுவதுமுள்ள 800 கோடி மக்களுக்கும் பயன்படுத்துகின்றனர். எனவே, நீர் நிலைகளில் மனித கழிவுகள், கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் காவிரியாற்று பகுதிகளான வாங்கல், நாமக்கல் மாவட்ட காவிரியாற்றின் கரையோர பகுதிகளான வேலுார், மோகனுாரிலும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மாணவர் விஷ்வக் நித்தினின் பெற்றோர், தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X