நாமக்கல்: நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் சங்கத்தில், ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள, வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் சேலம் மாவட்ட விவசாயிகள், 4,600 பருத்தி மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். இதில் ஆர்.சி.ெஹச்., ரகம் குவிண்டல் ஒன்றுக்கு, 5,750 முதல், 7,739 ரூபாய் வரையிலும், சுரபி ரகம், 7,613 முதல், 8,355 ரூபாய் வரையிலும், கொட்டு மட்டரகம், 3,599 முதல், 5,999 ரூபாய் வரையிலும் ஏலம் போனது. மொத்தம், 1 கோடி ரூபாய்க்கு ஏலம் நடந்தது.