கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
Added : மார் 22, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், துாய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில், துாய்மை பணியாளர்கள், காவலர்கள், உதவியாளர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மருத்துவமனை கண்காணிப்பாளர் அறை முன், தரையில் அமர்ந்து துாய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துாய்மை பணியாளர்களுக்கு, ஒப்பந்தம் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட ஊதியம் முறையாக வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்கள் வளர்மதி, நிர்மலா, பூங்கொடி, சுதா ஆகிய நான்கு பேரை, பழிவாங்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனம் 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு செய்பவர்களை கண்டித்து தர்ணா போராட்டம் நடந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த, நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால், கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டன.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
22-மார்-202315:52:45 IST Report Abuse
அநாமதேயம் இது எந்த காண்ட்ராக்ட்டரிடம் ஒப்பந்தம் செய்து நடத்துகிறாரோ அவர் தான் தீர்வு காண வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X