80 வயது மூதாட்டி பலாத்காரம் இருவருக்கு ஆயுள் தண்டனை | சேலம் செய்திகள்| 80-year-old woman raped, two sentenced to life imprisonment | Dinamalar
80 வயது மூதாட்டி பலாத்காரம் இருவருக்கு ஆயுள் தண்டனை
Added : மார் 22, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
 

சேலம்:சேலத்தில், 80 வயது மூதாட்டியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இரு வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பெரியசோரகை கிராமத்தைச் சேர்ந்த, 80 வயது மூதாட்டி, 2021ம் ஆண்டு அக்., 24ல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு வாலிபர்கள், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஓமலுார் மகளிர் போலீசார் சீனிவாசன், 20, விக்னேஷ், 23, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X