கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய 'நோட்டீஸ்'
Added : மார் 22, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Notice to confiscate collectors office   கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய 'நோட்டீஸ்'

விருதுநகர்:விருதுநகரில் பாதியில் நிறுத்தப்பட்ட ரோடு ஒப்பந்த பணிக்கான தொகையை வழங்காததற்காக கலெக்டர் அலுவலக கட்டடத்தை ஜப்தி செய்ய 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டது.

மதுரையை சேர்ந்த சவரிமுத்து திருமங்கலம் - சாத்துார் டோல்கேட் வரை தேசிய நெடுஞ்சாலை என்.எச்.7 ஏ., ரோடு போடும் பணியை ஒப்பந்தம் எடுத்தார். முப்பது சதவீத பணிகள் முடிந்த நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டன.

செய்த பணிக்கான தொகை 78 லட்சம் ரூபாயை வழங்கக் கோரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நிலுவைத் தொகையை ஒப்பந்ததாரருக்கு வழங்க 2007ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதை எதிர்த்து இருதரப்பும் அடுத்தடுத்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்றன.

கடந்த 2021ல் உச்ச நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பின்படி வட்டியுடன் நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்டது. அதன் பிறகும் நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.

பின், 2022 ஆகஸ்டில் விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் 9 சதவீத வட்டியுடன், 2 கோடியே 35 லட்சத்து 2 ஆயிரத்து 208 ரூபாய் வழங்க உத்தரவிட்டது.

ஆனால், அந்தத் தொகையை இதுவரை வழங்கவில்லை. இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றுனர் தலைமையில் கலெக்டர் அலுவலகம், அதை ஒட்டியுள்ள இடத்தை பொது ஏலம் விட அறிவிப்பு செய்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

கூரைக்குண்டு ஊராட்சி அலுவலக அறிவிப்பு பலகைகளிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X