மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கிராம சபைகளில்   தீர்மானம்
Added : மார் 23, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Resolution in village councils to remove encroachments on water bodies in the district   மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கிராம சபைகளில்   தீர்மானம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் நேற்று உலக தண்ணீர் தினத்தையொட்டி, கிராம சபை கூட்டம் நடந்தது.

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், பாண்டேஸ்வரம் ஊராட்சியில் நடந்த கிராம சபையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, மின்சாரம் குறித்த வினியோகம் செய்வதில்லை. போதிய பேருந்து வசதியில்லை. வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கிராம சபையில் பங்கேற்ற மக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

திருத்தணி ஒன்றியத்தில், சபை கூட்டம் நடந்தது. இதில் அலமேலுமங்காபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபையில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், திருத்தணி தாசில்தார் வெண்ணிலா, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், கால்நடை உதவி மருத்துவர் கீதா ஆகியோர் கலந்துக் கொண்டனர். பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.



பொன்னேரி




மீஞ்சூர் ஒன்றியத்தில், 55 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூடுவாஞ்சேரி ஊராட்சியில் ஏரி, குளம், குட்டை கள் துார்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும். அனுப்பம்பட்டு ஊராட்சியில் நீர்நிலை பகுதிகளை முழுமையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்.

கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில், 'ஜல்ஜீவன்' இயக்கத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும்.

அப்போது பெண்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து குடிநீர் வழங்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர்.

கடம்பத்துார் ஊராட்சியில் நடந்த கிராம சபையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் பங்கேற்று, மொபைல்போனுக்கு வங்கி தொடர்பாக வரும் குறுஞ்செய்திகளுக்கு எவ்வித பதிலும் அளிக்க கூடாது என அறிவுறுத்தினார்

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், 38 ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடந்தது. தண்ணீர் பாதுகாப்பு மற்றும் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதே போல், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில், 33 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், 61 ஊராட்சிகளில், கிராம சபை கூட்டம் நடந்தன.

இதில், புதிய நீர் ஆதாரங்களை ஏற்படுத்த வேண்டும், மாதம் இரு முறை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பூண்டி ஒன்றியம், பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் நடந்த கிராம சபையில் பங்கேற்ற பெண்கள் பேரிட்டிவாக்கம், உப்பரபாளையம் ஆகிய அனைத்து பகுதிகளில் குடிநீர் மஞ்சள் நிறமாக வருகிறது. சமையலுக்கு தண்ணீர் இன்றி தவிக்கிறோம் என புகார் தெரிவித்தனர்.
- நமது நிருபர் குழு -

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X