வங்கி பெண் மேலாளரிடம் ரூ.19.50 லட்சம் மோசடி
Added : மார் 23, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



கோவை: திருமண தகவல் மையம் மூலம் பழகி, தனியார் வங்கி பெண் மேலாளரிடம் ரூ.19.50 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்தவர், 26 வயது இளம்பெண், திருமணமாகாதவர். இவர், கோவையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார். இவருக்கு, திருமண தகவல் மையம் மூலம் ஒரு வாலிபர் அறிமுகமானார். அவர் தனது பெயர் ஜாபர் இப்ராஹிம், அமெரிக்காவில் டாக்டராக பணி புரிவதாக தெரிவித்தார். இந்நிலையில், ஜாபர் இப்ராஹிம், தான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து அவரை பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம், செல்போனில் அந்த வாலிபர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டார்.

அப்போது அவர் டெல்லி விமான நிலையத்தில் உள்ளதாகவும், தன்னிடம், ரூ.5 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அதனை இந்திய பணமாக மாற்ற ரூ.19.50 லட்சம் வரியாக செலுத்த வேண்டும் எனவும், கோவை வந்து அந்த பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். இளம்பெண் அந்த நபர் சொன்ன வங்கி கணக்கில், ரூ.19.50 லட்சம் செலுத்தினார். அதன் பின் ஜாபர் இப்ராஹிம் கோவைக்கு வரவில்லை. மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதுகுறித்து, அந்த இளம்பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X