மதுரை : துாத்துக்குடியை சேர்ந்த 82 வயது பெண்ணிற்கு வாரிசு சான்று வழங்க தாக்கலான வழக்கில் ஆர்.டி.ஓ., உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி சங்கர புஷ்பம் தாக்கல் செய்த மனு: எனது தந்தை தெய்வேந்திரன் 1955 ல் இறந்தார். அதை பதிவு செய்ய வேண்டும் என்பது தெரியாததால் அரசிடம் பதிவு செய்யவில்லை. எனது தாய் 2014 ல் இறந்தார். அதற்கு இறப்புச் சான்று உள்ளது. அவர்களுக்கு நானும், சகோதரி பூபதியம்மாள் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசுகள். பூபதியம்மாள் 2015 ல் இறந்தார். அதற்கு இறப்புச் சான்று உள்ளது.
தந்தை தமிழக அரசிடம் ஓய்வூதியம் பெற்று வந்தார். அவர் இறந்த பின் தாய் குடும்ப ஓய்வூதியம் பெற்றார்.வாரிசு சான்று வழங்கக்கோரி துாத்துக்குடி தாசில்தாரிடம் மனு செய்தேன். நிராகரித்தார். அதை ரத்து செய்து சான்று வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சங்கர புஷ்பம் குறிப்பிட்டார்.
நீதிபதி சி.வி.கார்த்திகேயன்: தாய் குடும்ப ஓய்வூதியம் பெற்றார் என்றாலே தந்தை இறந்து விட்டார் என அர்த்தம். அதை கருத்தில் கொண்டு மூத்த குடிமகனான 82 வயது மனுதாரரை அலையவிடுவதற்கு பதிலாக தாசில்தார் முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
2022 ல் வெளியான வருவாய்த்துறையின் அரசாணைப்படி மேல்முறையீடு செய்ய வழிவகை உள்ளதாக அரசு தரப்பு கூறியது. மனுதாரர் ஆர்.டி.ஓ.,விடம் மேல்முறையீடு செய்யலாம். அவர் ஆவணங்களை ஆய்வு செய்து மனுதாரரின் வயதை கருத்தில் கொண்டு தேவையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.