ரூ.1000 கோடி மோசடி வழக்கு : 3 பேரின் முன்ஜாமின் தள்ளுபடி
Added : மார் 23, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



மதுரை : தஞ்சாவூரில் தனியார் நிறுவனம் மூலம் முதலீட்டாளர்களிடம் ரூ.1000 கோடி மோசடி செய்த வழக்கில் 3 பேரின் முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.



தஞ்சாவூரில் ராஹத் டிரான்ஸ்போர்ட் கம்பெனி பெயரில் பதிவு செய்யப்படாத நிறுவனம் நடத்தப்பட்டது. நிறுவனத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.11 ஆயிரம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. பல முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணத்தை தராமல் ஏமாற்றியதாக உரிமையாளர் கமாலுதீன், மனைவி ரெஹானா பேகம், சகோதரர் அப்துல் கனி, மேலாளர் நாராயணசாமி மீது திருச்சி பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். அப்துல் கனி, ரெஹானா பேகம், நாராயணசாமி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.மனுதாரர் தரப்பு: வழக்கில் 2வது எதிரியாக சேர்க்கப்பட்டவர் (கமாலுதீன்) நிறுவன உரிமையாளர். அவர் இறந்துவிட்டார். குற்றத்தில் மனுதாரர்கள் ஈடுபடவில்லை. வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் செயலுக்கு மனுதாரர்கள் பொறுப்பல்ல. மனுதாரர்கள் எந்தத் தொகையையும் வசூலிக்கவில்லை.
கமாலுதீன் செய்த தவறுக்காக மனுதாரர்களை தண்டிக்க முடியாது. மனுதாரர்களின் பெயரில் எந்த சொத்தும் இல்லை. மனுதாரர்கள் அளித்த விபரங்களின்படி இதுவரை 50 பஸ்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 22 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மனுதாரர்களிடம் போலீசார் விசாரிக்க தேவையில்லை.

புகார்தாரர் தரப்பு: மனுதாரர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களும் அதே தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மனுதாரர்களின் துாண்டுதல் பேரில் டெபாசிட் வசூல் நடந்துள்ளது. இதனால் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து எந்தத் தொகையும் மீட்கப்படவில்லை. சொத்துக்களை பறிமுதல் செய்யவில்லை. முன்ஜாமின் அனுமதிக்கக்கூடாது.

தமிழக அரசு தரப்பு: வழக்கில் தொடர்புடையோர் ரூ.1000 கோடி மோசடி செய்துள்ளனர். ரூ.22 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை ஜப்தி செய்ய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. 57 ஆம்னி பஸ்கள், சில கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மனுதாரர்கள் மூலமாக பலர் டெபாசிட் செய்துள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதி: பலரிடம் ரூ.1000 கோடி டெபாசிட் வசூலித்து, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளனர். 2020 பிப்ரவரி வரை டெபாசிட்தாரர்களுக்குரிய தொகை வழங்கப்பட்டுள்ளது. பின் தொகையை வழங்கவில்லை.

மனுதாரர்கள் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு எதிராக கடுமையான குற்றத்தை செய்து ரூ.1000 கோடி மோசடி செய்துள்ளனர். காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X