திருச்சி : திருச்சியில், போலி ஆவணத்தை கொடுத்து 82 லட்சம் ரூபாய் மோசடி செய்த இடைத்தரகரை, நேற்று, போலீசார் கைது செய்தனர்.
இதற்கான ஆவணங்களை சரி பார்த்த போது, அந்த இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது எனத் தெரிய வந்தது.
எனவே, போலி ஆவணங்கள் மூலம் தன்னை ஏமாற்றி, 82 லட்சம் ரூபாய் மோசடி செய்த டேனியல் ஜூலியஸ் ராஜ் மீது நடவடிக்கை எடுக்குமாறு, 2021-ம் ஆண்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், கவிதா புகார் அளித்தார்.
மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். தலைமறைவாக இருந்த டேனியல் ஜூலியஸ் ராஜை, நேற்று, இன்ஸ்பெக்டர் கோசல்ராம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.