ஆலங்கட்டி மழை, சூறாவளியால் 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் | தேனி செய்திகள்| 10 thousand banana trees damaged due to hailstorm and cyclone | Dinamalar
ஆலங்கட்டி மழை, சூறாவளியால் 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்
Added : மார் 23, 2023 | |
Advertisement
 
10 thousand banana trees damaged due to hailstorm and cyclone   ஆலங்கட்டி மழை, சூறாவளியால்  10 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

தேனி:கோட்டூரில் பெய்த ஆலங்கட்டி மழை, சூறாவளியால் 10 ஆயிரம் நேந்திரன் வாழை மரங்கள் தார்களுடன் சாய்ந்தன. 36 தென்னை மரங்கள் வேரோடும், கரும்பு, மக்காச்சோளப்பயிர்கள் செடிகள் சேதமடைந்தன.

தேனி மாவட்டம், கோட்டூர் என்.ஜி.காலனி விவசாயி பெரியசாமி 53. இவர் 2 ஏக்கரில் நேந்திரன் வாழை பயிரிட்டிருந்தார்.

தார்களுடன் அறுவடைக்கு தயாராக இருந்தது. இருதினங்களுக்கு முன் ஆலங்கட்டி மழையுடன் சூறாவளி வீசியது.

இதில் 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன. அதே பகுதியில் திருமூர்த்தியின் தென்னந்தோப்பில் 36 தென்னை மரங்கள் சாய்ந்தன. மேலும் தலா 1 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, மக்காச்சோளப் பயிர்களும் சேதமாயின.

தேனி வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி உள்ளிட்ட அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X