'சுருங்கும்' ரோடு; பெரிதாகும் நெரிசல்! திருப்பூரில் வாகன ஓட்டிகள் பெரும்பாடு
Added : மார் 24, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



திருப்பூர்: திருப்பூர் நகரம் மற்றும் ஊரக பகுதிகளில், வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்ட நிலையில், அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன; சாலை விரிவாக்கம் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் நகரின் புறநகர் பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமானோர் பல்வேறு பணியின்மித்தம், திருப்பூர் வந்து செல்கின்றனர். நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அவிநாசி - திருப்பூர் சாலையில், வாகன நெரிசல் என்பது, அன்றாட நிகழ்வாகி விட்டது.

அடிக்கடி விபத்து நேரிடுகிறது. அளவுக்கதிகமான வாகனங்கள், அதிவேகம், கவனச்சிதறல் என, பல்வேறு காரணங்களால் விபத்து நேரிடுகிறது என, போலீசார் தெரிவிக்கின்றனர். எனவே, சாலை விரிவாக்கம் மற்றும் தடையில்லா வாகன போக்குவரத்து சார்ந்து திட்டமிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:

திருப்பூர் - அவிநாசி ரோடு, நான்கு வழிப்பாதையாக தான் உள்ளது. ஆனால், சாலையோர கடைகளின் எண்ணிக்கை, ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டதால், பல இடங்களில் சாலை சுருங்கியுள்ளது. 'பிழைக்க வழியில்லை' எனக்கூறி சாலையோர கடைகளை பலரும் அமைத்துக் கொள்கின்றனர். 'இதுதான், தங்களின் வாழ்வதாரம்' என தங்களை நிலைப்படுத்தியும் கொள்கின்றனர்.

அந்த வகையில் ஏராளமான சாலையோர கடைகள் உருவாகிவிட்டன. அடிக்கடி விபத்து நடக்கும் இடங்கள், குறுகலான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, அந்த இடத்தை உரிமை கொண்டாடுகின்றனர்; இதனால், நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. பல இடங்களில், நான்கு வழிப்பாதை கூட, இரு வழிப்பாதையாக 'சுருங்கி' விட்டது.

தற்போது, நகர்புறம் மட்டுமின்றி, கிராமப்புறங்களில் கூட வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துவிட்ட நிலையில், இரு வழிப்பாதைகளை கூட நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

திருப்பூர் - அவிநாசி சாலையில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. சாலையோர ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தினாலே சாலையில் விபத்து, நெரிசல் தவிர்க்கப்படும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நெடுஞ்சாலைத்துறையினர் மட்டுமின்றி, போலீசார், உள்ளாட்சி நிர்வாகத்தினர், மின்வாரியத்தினர் என சம்மந்தப்பட்ட துறையினர் அனைவரும் இணைந்து, சாலையில் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கவும் தடையில்லா, விபத்தில்லா போக்குவரத்துக்கு வழிவகை ஏற்படுத்தவும் திட்டமிடவேண்டும்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் சாலை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்திலும், இதுகுறித்து விவாதித்து, ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏராளமான சாலையோர கடைகள் உருவாகிவிட்டன. அடிக்கடி விபத்து நடக்கும் இடங்கள், குறுகலான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, அந்த இடத்தை உரிமைக் கொண்டாடுகின்றனர்

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X