நிர்க்கதியாக நிற்கும் பெண் பிள்ளைகள்
Added : மார் 24, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Girl children who stand helpless   நிர்க்கதியாக நிற்கும் பெண் பிள்ளைகள்

காஞ்சிபுரம் அருகே நேற்று முன்தினம் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் ஒன்பது பேர் இறந்தனர். இதில் காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியை சேர்ந்த கங்காதரன் 50. அவர் மனைவி விஜயா, 39. இருவரும் பரிதாமாக இறந்தனர்.

அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். தற்போது தாய், தந்தையை இழந்து தவிக்கும் சிறுமியரின் எதிர்காலம் நிலைமை அப்பகுதி மக்களிடம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஆபத்து என தெரிந்தும் பட்டாசு தயாரிப்பு தொழில் செய்வதற்கு அவர்களின் வறுமைதான் காரணம். தினசரி கூலி வேலை செய்தால்தான் அன்றாடும் வாழ்க்கை நடத்த முடியும் என் நிலையில் இருந்தவர்கள் நேற்று முன்தினம் நடந்த வெடி விபத்தில் சிக்கி உடல் கருகி பலியாகினர்.

இந்த விபத்து காஞ்சிபுரம் சுற்று பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியை சேர்ந்த கங்காதரன் அவரது மனைவி விஜயா பட்டாசு தயாரிப்பு வேலைக்கு சென்றவர்கள் பலியாகினர். அவர்கள் மூத்த மகள் சங்கவி 14. காஞ்சிபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் ரூபினி, 12. அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

பெற்றோர் இறந்த சோகத்தில் அக்கா - தங்கை இருவரும் ஆழ்ந்த சோகத்தில் காணப்பட்டனர். அவர்கள் எதிர்கால படிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெடி விபத்தில் இறந்த கங்காதரன், விஜயா ஆகியோர் உடல் அடையாளம் தெரியாத நிலையில் உடல் துண்டு துண்டாக இருந்தது. நேற்று மதியம் அவர்கள்தான் என உறுதி செய்யப்பட்டு உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் நரேந்திரன் கைது செய்யப்பட்டார்.

மற்றும் பட்டாசு தொழிற்சாலை மேலாளர் மணிகண்டன் 32. என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் வெடி விபத்தில் காயம் ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X