சின்னாளபட்டி--சின்னாளபட்டியில் விடுமுறை நாட்களில் அனுமதியின்றி அதிக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வலியுறுத்தி, பா.ஜ.,வினர் நுாதன ஊர்வலம் நடத்தினர்.
சின்னாளபட்டியில் சில வாரங்களாக ரோட்டோர மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மரங்களை அனுமதியின்றி தனி நபர்கள் வெட்டிச் செல்வதாக பேரூராட்சி கவுன்சிலில் புகார் எழுந்தது. இச்சூழலில் உரிய அனுமதி பெறாமல் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வலியுறுத்தி பா.ஜ., சார்பில் கோரிக்கை ஊர்வலம் நடந்தது. சின்னாளபட்டி மண்டல் தலைவர் விக்கேஷ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில்,''அரசு விடுமுறை நாட்களில் பேரூராட்சிக்கு சொந்தமான மரங்களை வெட்டி கடத்தி உள்ளனர்.
பேரூராட்சி, வருவாய் துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதுடன் நடவடிக்கை எடுப்பதை அலட்சியப்படுத்துகின்றனர்.
அப்புறப்படுத்தப்படும் மரங்களை தனியாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது டவடிக்கை எடுக்க வேண்டும்''என்றார்.
மாவட்ட மத்திய அரசு நலத்திட்ட பிரிவு செயலாளர் மணிமாறன், மண்டல் துணைத் தலைவர் ராஜேஸ்வரி, ஒன்றிய பொருளாளர் பூங்காவனம், பொதுச் செயலாளர் விமல்குமார் முன்னிலை வகித்தனர்.
அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்களின் படங்களை பதாகைகளாக உடலில் அணிந்து ஊர்வலமாகச் சென்றனர். பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜிடம் மனு கொடுத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.