காங்., கட்சியினர் ரயில் மறியல்; விருத்தாசலத்தில் பரபரப்பு | கடலூர் செய்திகள்| Cong., partisans rail strike; Excitement in Vridthachalam | Dinamalar
காங்., கட்சியினர் ரயில் மறியல்; விருத்தாசலத்தில் பரபரப்பு
Added : மார் 24, 2023 | |
Advertisement
 
Cong., partisans rail strike; Excitement in Vridthachalam   காங்., கட்சியினர் ரயில் மறியல்; விருத்தாசலத்தில் பரபரப்பு



விருத்தாசலம் : ராகுலுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து விருத்தாசலத்தில் காங்., கட்சியினர் ரயில் மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமரை அவதுாறாக பேசிய வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில், காங்., கட்சியினர் பகல் 1:50 மணிக்கு, விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் வந்த மும்பை - மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X