விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை, வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா, பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக, அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி எம்.பி., சதானந்தன், ராஜமகேந்திரன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகியோர் மீது கடந்த 2012ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இவ்வழக்கு விசாரணை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று வழக்கு விசாரணையின்போது, கோபிநாத், சதானந்தன், ஜெயச்சந்திரன் ஆகியோர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், கோதகுமார் ஆஜராகவில்லை. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.