இரு தரப்பு மோதல் வழக்கு; ஊராட்சி தலைவருக்கு '3 ஆண்டு'
Added : மார் 24, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



விழுப்புரம் : மயிலம் அருகே இரு தரப்பினர் மோதல் வழக்கில் ஊராட்சி தலைவர் உட்பட 5 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் கோர்ட் தீர்ப்பளித்தது.

விழுப்பும் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கீழ்எடையாளம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் மனைவி சாந்தா, 23; அதே பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இரு தரப்பினருக்குமிடையே தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.

இதன் காரணமாக மனோகரன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த 15 பேர் சேர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி சாந்தாவின் வீட்டிற்குள் புகுந்து, அவரது குடும்பத்தினரை தாக்கி வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.

இதுகுறித்து, சாந்தா அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் மனோகரன் உட்பட 15 பேர் மீது கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிந்தனர்.

இவ்வழக்கில் மனோகரன், பாலு, சரவணன், சதீஷ், முரளி, மணிமாறன், பிரேம், விமல், பரந்தாமன், அன்பு, செந்தில், சத்யராஜ், ஜெயப்பிரகாஷ், பாரதிராஜா, ராமு ஆகிய 15 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில், விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட மனோகரன், பாலு, சரவணன், சதீஷ், முரளி ஆகிய 5 பேருக்கு தலா 3 ஆண்டு சிறையும், தலா 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மற்ற 10 பேருக்கும் தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மனோகரன், கீழ்எடையாளம் ஊராட்சி தலைவராக உள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X