பெண்ணை கொலை செய்த நண்பர்கள் இருவருக்கு ஆயுள்
Added : மார் 24, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ரமணியை 38, கொலை செய்த சம்பவத்தில் நண்பர்கள் பட்டு 36, நாகராஜ் 26, ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராஜபாளையம் இ.எஸ்.ஐ. காலனியை சேர்ந்தவர் மோகன் மனைவி ரமணி. இவர் பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்தார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சங்கர்,30, பட்டு, நாகராஜ் ஆகியோர் கடன் வாங்கினர். வாங்கிய கடனை திரும்ப கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரமணி, நாகராஜ் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டும், சங்கர் வீட்டில் உள்ள பொருட்களையும், பட்டுவின் லேத் பட்டறையில் இருந்த பொருட்களையும் எடுத்துச் சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மூவரும் தங்கள் மற்றொரு நண்பர் பட்டுமுத்து 34, என்பவருடன் சேர்ந்து 2014 அக். 7 மதியம் பட்டுவின் ஒர்க் ஷாப் அருகே ரமணியை, வரவழைத்து கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.

ராஜபாளையம் தெற்கு போலீசார் சங்கர், பட்டு, நாகராஜ், பட்டு முத்து ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கு நடைபெற்று வந்த காலத்தில் சங்கர், பட்டுமுத்து இறந்து விட்டனர். பட்டு மற்றும் நாகராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X