மதுரை : உணவு பாதுகாப்பு அதிகாரி நியமன விதிகளில் திருத்தம் செய்ததற்கு எதிராக தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம் போடி டொம்புச்சேரி ஜனனி தாக்கல் செய்த மனு:
உணவு பாதுகாப்பு அதிகாரி பணிக்கு மருத்துவம், உணவு தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி, வேதியியல், பயோகெமிஸ்ட்ரியில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தகுதியாகும்.பி.எஸ்.சி.,(வேதியியல்) முடித்துள்ளேன். உணவு பாதுகாப்பு அதிகாரி பணிக்குரிய தகுதியை பெற்றுள்ளேன். இதில் காலிப் பணியிடங்கள் உள்ளன.
சட்டப்படி நேரடி நியமனம் மூலம் மட்டுமே பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதற்கு மாறாக சட்டவிரோதமாக நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் குறைவான பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
உணவு பாதுகாப்பு அதிகாரி பதவியில் 300 பேர் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றவில்லை. நேரடி நியமனங்கள் மேற்கொள்ளவில்லை. இது சட்டத்திற்கு முரணானது. இவர்களில் பலர் சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள்.
உணவு பாதுகாப்பு அதிகாரி பணி நியமன விதிகளில் திருத்தம் செய்து தமிழக சுகாதாரத்துறை 2022 ஜூன் 30 ல் அரசாணை வெளியிட்டது. இது சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் வகையில் உள்ளது.
விதிமீறல் உள்ளது. விதி திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். நேரடியாக அல்லாமல் இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் போதிய தகுதியின்றி நியமிக்கப்பட்டவர்களை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். இடஒதுக்கீட்டை பின்பற்றி நேரடி நியமனங்கள் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஜனனி குறிப்பிட்டார். நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், பி.புகழேந்தி அமர்வு தமிழக சுகாதரத்துறை செயலர், உணவு பாதுாப்புத்துறை கமிஷனர், நகராட்சி நிர்வாக கமிஷனர், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணைய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஏப்.,20 க்கு ஒத்திவைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.